ஹிஜாப் அனுமதி கோரி போராட்டம் நடத்திய 58 மாணவிகள் மொத்தமாக சஸ்பெண்ட்... கர்நாடக பள்ளி தடாலடி
பெங்களூர்: கர்நாடகத்தில் ‛ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை. இறந்தாலும் இந்த உரிமையை விட்டு கொடுக்கமாட்டோம்' எனக்கூறி பள்ளியில் போராட்டம் நடத்திய 58 மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்ட பியூ கல்லூரிகளில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் துவங்கியது. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்தன. ஹிஜாப்புக்கு போட்டியாக சிலர் காவிஷால் அணிந்து கல்லூரிகளுக்கு சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இடைக்கால உத்தரவு
இதையடுத்து கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும், கர்நாடக அரசும் பள்ளி, கல்லூரிகளில் சீருடை முறை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது. கல்லூரிகளில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தொடர்ந்து விசாரித்து வருகிறது. கடந்த வார விசாரணையின்போது, ‛‛வழக்கு விசாரணை முடியும்வரை பள்ளி, கல்லூரிகளில் மதம்சார்ந்த ஆடைகளை அணியக்கூடாது'' என நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

பள்ளி, கல்லூரிகளில் எதிர்ப்பு
இதையடுத்து ஹிஜாப் பிரச்சனையால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. பிப்., 14ல் 10 வகுப்பு வரை பள்ளிகளும், பியூ, டிகிரி கல்லூரிகள் பிப்.,16 முதலும் செயல்பட துவங்கின. முன்னெச்சரிக்கையாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளை சுற்றி 200 மீட்டருக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருகின்றனர். இவர்களை பள்ளி நிர்வாகத்தினர் தடுத்து ஹிஜாப்பை அகற்ற வலியுறுத்துகின்றனர். இதற்கு சில மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து திரும்பி செல்கின்றனர். இதுதொடர்பாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து துமகூருவில் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மாணவிகள் போராட்டம்
இந்நிலையில் சிவமொக்கா மாவட்டம் சிரளகொப்பாவில் உள்ள பப்ளிக் பள்ளி வளாகத்தில் நேற்று தடையை மீறி மாணவிகள் போராட்டம் நடத்தினர். ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும். இது எங்களின் அடிப்படை உரிமை என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். மேலும், ‛‛ஹிஜாப் அணிவது எங்களின் உரிமை. நாங்கள் இறந்தாலும் கூட ஹிஜாப் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம்'' என கோஷமிட்டனர்.

58 பேர் சஸ்பெண்ட்
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தாசில்தார், போலீசார், கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கர்நாடக ஐகோர்ட்டின் இடைக்கால உத்தரவு, 144 தடை உத்தரவு பற்றி எடுத்து கூறினர். ஆனால் அவர்கள் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 58 மாணவிகளை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications