இந்தியாவிலேயே முதல் முறையாக பெங்களூரில் பிட்காயின் ஏடிஎம்.. அப்புறம் என்ன ஆனது தெரியுமா?
Recommended Video

பெங்களூர்: இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் பிட் காயின் ஏடிஎம் நிறுவப்பட்டது. இதை அறிந்த சைபர் கிரைம் போலீசார் அதை அகற்றியதோடு நிறுவனத்தின் இணை நிறுவனரை கைது செய்துள்ளனர்.
பிட்காயின் போன்ற வர்த்தகத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ள நிலையில், இதுபோன்ற ஒரு ஏடிஎம் மையம் பெங்களூரில் திறக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் எச்ஏஎல் பகுதியில் உள்ள கெம்ப் போர்ட் மால் பகுதியில் இந்த ஏடிஎம் கடந்தவாரம் நிறுவப்பட்டது.
[ரூ.7.34 கோடியை அப்படியே தூக்கி கொடுத்த துபாய்.. இந்தியருக்கு கிடைத்த பம்பர் பரிசு ]

சைபர் கிரைம்
"யுனோகாயின் (Unocoin) என்ற நிறுவனம் சார்பில் கெம்ப் போர்ட் மாலில் இந்த ஏடிஎம் நிறுவப்பட்டது. இதற்காக மாநில அரசிடமிருந்து எந்த ஒரு அனுமதியும் அந்த நிறுவனம் பெறவில்லை. இது சட்டத்திற்கு புறம்பானது" என்று சைபர் கிரைம் காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணை நிறுவனர்
யுனோகாயின் இணை நிறுவனரான ஹரிஷ் என்ற 37 வயது இளைஞரை காவல்துறை கைது செய்து அவரிடமிருந்து, 1 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய்களை பறிமுதல் செய்ததோடு, இரண்டு லேப்டாப்புகள், ஒரு மொபைல் போன், மூன்று கிரெடிட் கார்டுகள், ஐந்து டெபிட் கார்டுகள், பாஸ்போர்ட் ஐந்து நிறுவனங்களின் சீல்கள் உள்ளிட்டவற்றை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

இந்தியாவின் முதல் பிட்காயின் ஏடிஎம்
ஹரீஷ் பெங்களூரு முதலாவது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த பிட் காயின் ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்வது, மற்றும் எடுத்துக் கொள்ளும் வசதி இருந்தது. இதுதான் இந்தியாவின் முதலாவது பிட் காயின் ஏடிஎம் என்ற பெயரை பெற்றது.
|
இப்படியா செய்வது
இந்த ஏடிஎம் மையம் திறக்கப்பட்டது குறித்து, யுனோகாயின் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தோடு தகவல் வெளியிட்டிருந்தது. ரிசர்வ் வங்கியே தடை செய்த ஒரு விஷயத்தை வெளிப்படையாக செய்யும் தைரியம் இவர்களுக்கு எங்கே இருந்து வருகிறது?
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications