என்ன நடந்தது? பாதியில் கைவிட்ட சிஎஸ்கே.. டு பிளஸிஸை ஆர்சிபி எடுத்தது ஏன் தெரியுமா? பரபர பின்னணி
பெங்களூர்: சிஎஸ்கே அணியின் டாப் வீரராக இருந்த டு பிளஸிஸை பெங்களூர் அணி இந்த முறை போராடி ஏலம் எடுத்துள்ளது.
2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. டாப் வீரர்களின் ஏலம் முதல் கட்டமாக முடிந்துள்ளது.
டு பிளசிசை சிஎஸ்கே இழந்துள்ளது. சிஎஸ்கே அணியில் கடந்த 3 சீசன்கள் டு பிளசிஸ் மிக சிறப்பாக ஆடிய வீரர் டு பிளசிஸ். அதிலும் கடந்த வருடம் டு பிளசிஸ்தான் இரண்டாவது டாப் ரன் ஸ்கோரர்.

டு பிளசிஸ்
இவரை விட ருத்துராஜ் ஒரு ரன் மட்டுமே கூடுதலாக எடுத்து இருந்தார். அந்த அளவிற்கு சிஎஸ்கே அணிக்காக இவர் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்தார். இரண்டு சீசன்களில் சிஎஸ்கே கப் அடிக்க டு பிளசிஸ் காரணமாக இருந்தார்.பேட்டிங் மட்டுமின்றி இவர் பீல்டிங்கிலும் மிக சிறப்பாக செயலாற்றி வந்தார். அதேபோல் சிறந்த கேப்டன்சி மெட்டீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.

டு பிளசிஸ்
இந்த நிலையில்தான் ஏலத்திற்கு முன்பாக டு பிளசிஸை சிஎஸ்கே ரீ டெயின் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏலத்தின் போது சிஎஸ்கே இவரை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இன்று ஏலத்தில் சிஎஸ்கே டு பிளசிசை எடுக்கவில்லை. பெங்களூர் அணி இவரை போராடி அணியில் எடுத்துள்ளது. இவர் பெயரை அறிவித்தது சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க முயன்றது

பெங்களூர்
டு பிளசிஸை மூன்றரை கோடி ரூபாய் வரை எடுக்க சிஎஸ்கே முயன்றது. ஆனால் 4 கோடியை தாண்டிய பின் டு பிளசிசை சிஎஸ்கே பாதியில் கைவிட்டது. அதற்கு மேல் டு பிளசிசை சிஎஸ்கே கேட்கவில்லை. அதன்பின் ஏலத்தில் டெல்லி, குஜராத், பெங்களூர் அணிகள் கடுமையாக மோதின. ஆனால் என்ன நடந்தாலும் டு பிளசிஸை விட மாட்டோம் என்று பெங்களூர் முயன்றது.
Recommended Video

பெங்களூர்
கடைசியில் 7 கோடி ரூபாய்க்கு டு பிளசிசை பெங்களூர் எடுத்தது. பெங்களூர் அணியில் இப்போது கேப்டன் இல்லை. அந்த அணி புதிய கேப்டனை தேடி வருகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக், கரிபியன் லீக்கில் கேப்டனாக இருந்தவர் டு பிளசிஸ். அதேபோல் தென்னாப்பிரிக்க அணியிலும் கேப்டனாக இருந்தவர் டு பிளசிஸ். இதனால் அவரை இந்த முறை பெங்களூர் அணி கேப்டனாக அறிவிக்கும் முனைப்பில் எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications