என்ன நடந்தது? பாதியில் கைவிட்ட சிஎஸ்கே.. டு பிளஸிஸை ஆர்சிபி எடுத்தது ஏன் தெரியுமா? பரபர பின்னணி
பெங்களூர்: சிஎஸ்கே அணியின் டாப் வீரராக இருந்த டு பிளஸிஸை பெங்களூர் அணி இந்த முறை போராடி ஏலம் எடுத்துள்ளது.
2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. டாப் வீரர்களின் ஏலம் முதல் கட்டமாக முடிந்துள்ளது.
டு பிளசிசை சிஎஸ்கே இழந்துள்ளது. சிஎஸ்கே அணியில் கடந்த 3 சீசன்கள் டு பிளசிஸ் மிக சிறப்பாக ஆடிய வீரர் டு பிளசிஸ். அதிலும் கடந்த வருடம் டு பிளசிஸ்தான் இரண்டாவது டாப் ரன் ஸ்கோரர்.
என்ன இதுதான் கடைசி ஏலமா? ஒரே குடும்பமாக இருந்தாலும்.. துணிந்து முடிவு எடுக்கும் சிஎஸ்கே- செம மாற்றம்
டு பிளசிஸ்
இவரை விட ருத்துராஜ் ஒரு ரன் மட்டுமே கூடுதலாக எடுத்து இருந்தார். அந்த அளவிற்கு சிஎஸ்கே அணிக்காக இவர் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்தார். இரண்டு சீசன்களில் சிஎஸ்கே கப் அடிக்க டு பிளசிஸ் காரணமாக இருந்தார்.பேட்டிங் மட்டுமின்றி இவர் பீல்டிங்கிலும் மிக சிறப்பாக செயலாற்றி வந்தார். அதேபோல் சிறந்த கேப்டன்சி மெட்டீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.
டு பிளசிஸ்
இந்த நிலையில்தான் ஏலத்திற்கு முன்பாக டு பிளசிஸை சிஎஸ்கே ரீ டெயின் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏலத்தின் போது சிஎஸ்கே இவரை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இன்று ஏலத்தில் சிஎஸ்கே டு பிளசிசை எடுக்கவில்லை. பெங்களூர் அணி இவரை போராடி அணியில் எடுத்துள்ளது. இவர் பெயரை அறிவித்தது சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க முயன்றது
பெங்களூர்
டு பிளசிஸை மூன்றரை கோடி ரூபாய் வரை எடுக்க சிஎஸ்கே முயன்றது. ஆனால் 4 கோடியை தாண்டிய பின் டு பிளசிசை சிஎஸ்கே பாதியில் கைவிட்டது. அதற்கு மேல் டு பிளசிசை சிஎஸ்கே கேட்கவில்லை. அதன்பின் ஏலத்தில் டெல்லி, குஜராத், பெங்களூர் அணிகள் கடுமையாக மோதின. ஆனால் என்ன நடந்தாலும் டு பிளசிஸை விட மாட்டோம் என்று பெங்களூர் முயன்றது.
Recommended Video
பெங்களூர்
கடைசியில் 7 கோடி ரூபாய்க்கு டு பிளசிசை பெங்களூர் எடுத்தது. பெங்களூர் அணியில் இப்போது கேப்டன் இல்லை. அந்த அணி புதிய கேப்டனை தேடி வருகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக், கரிபியன் லீக்கில் கேப்டனாக இருந்தவர் டு பிளசிஸ். அதேபோல் தென்னாப்பிரிக்க அணியிலும் கேப்டனாக இருந்தவர் டு பிளசிஸ். இதனால் அவரை இந்த முறை பெங்களூர் அணி கேப்டனாக அறிவிக்கும் முனைப்பில் எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.