ஏலத்திற்கு வராமலே.. சொல்லி அடித்த பிரீத்தி ஜிந்தா.. ப்பா பஞ்சாப் டீமே மாறிடுச்சே.. 9 அணிகளுக்கு செக்
பெங்களூர்: 2022 ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணி தொடக்கத்தில் இருந்து சிறப்பான வீரர்களை ஏலம் எடுத்து வருகிறது.
2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெங்களூரில் ஏலம் நடந்து வருகிறது.
இந்த முறை ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன் ஆகிய இரண்டு அணிகள் இணைந்துள்ளன.

பஞ்சாப்
இதனால் ஐபிஎல் தொடரில் இந்த முறை 10 அணிகள் ஆட உள்ளது. கடந்த 3 வருடங்களில் ஐபிஎல்லில் மோசமாக ஆடிய அணிகள் என்றால் அது பஞ்சாப் அணிதான். முக்கியமாக கே. எல் ராகுல் கேப்டன்சிக்கு கீழ் அந்த அணி மிக மோசமாக திணறியது. அதனால் ஏலத்திற்கு முன்பாகவே பஞ்சாப் அணி இவரை கழற்றி விட்டது.

ராகுல்
இதையடுத்து தற்போது ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்னொரு பக்கம் பஞ்சாப் அணி இன்று ஏலத்தில் சிறப்பான வீரர்களை எடுத்துள்ளது. யாரும் எதிர்பார்க்காமல் வரிசையாக டாப் வீரர்களை பஞ்சாப் அணி ஏலம் எடுத்து வருகிறது. தொடக்கத்திலேயே ஷிகர் தவானை எடுக்க பஞ்சாப் அணி தீவிரம் காட்டியது.

தவான்
அதன்படி டெல்லியில் சிறப்பாக ஆடி வந்த ஷிகர் தவானை ரூ. 8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ். டெல்லி அணியுடன் போராடி பஞ்சாப் அணி இவரை எடுத்தது. அதன்பின் டெல்லியுடன் போராடி ரபாடாவை பஞ்சாப் அணி 9.25 கோடி ரூபாய்க்கு எடுத்தது. இவர்கள் இரண்டு பேருமே கடந்த 3 வருடமாக டெல்லி அணியில் சிறப்பாக ஆடி வந்தனர். ஏற்கனவே பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் இருக்கிறார்.
Recommended Video

வலிமையான டீம்
அதேபோல் வலிமையான பவுலரான அர்ஷ்தீப் உள்ளார். இந்த நிலையில் தவான், ரபாடா வருகை மூலம் பஞ்சாப் அணி புதிய கோர் டீமை பெற்றுள்ளது. ஏலத்தின் தொடக்கத்திலேயே பஞ்சாப் அணி சிறப்பான வீரர்களை எடுத்து 9 அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. பஞ்சாப் அணி ஓனர் ப்ரீத்தி ஜிந்தா ஏலத்திற்கு வராமலே சிறப்பான அணியை எடுத்துள்ளது. பெரும்பாலும் தவான் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications