Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா.. பாருங்களேன்.. விக்ரம் லேண்டரையே போட்டோ எடுத்த சந்திரயான் 3 ரோவர்.. எப்படி இருக்கு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரை முதன் முறையாக புகைப்படம் எடுத்திருக்கிறது. இதனை இஸ்ரோ தற்போது வெளியிட்டிருக்கிறது.

நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ISRO has released the photograph taken by Pragyan rover Vikram lander on the moon

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது.

பின்னர் விக்ரம் லேண்டரிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வை தொடங்கியுள்ளது. இந்த ஆய்வில் தற்போது சில தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதாவது நிலவில் இருக்கும் தனிமங்களை பிரக்யான் ரோவர் உறுதி செய்திருக்கிறது. அதாவது, நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்திருக்கிறது.

அதேபோல இங்கு ஹைட்ரஜன் இருக்கிறதா? என்பதை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் ஹைட்ரஜன் இருக்கும் இடத்தில்தான் நீர் இருக்கும். ஹைட்ரஜன் இரண்டு பங்கும் ஆக்ஸிஜன் ஒரு பங்கும் சேர்ந்தால்தான் (H2O) நீர் உருவாக முடியும். எனவே ரோவர் ஆக்ஸிஜன் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அதேபோல தற்போது கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களில் சல்பரை பிரக்யான் இருப்பதை ரோவர் நின்ற இடத்திலிருந்தே உறுதி செய்திருக்கிறது.

முன்னதாக விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு முன் நிலவை பல கோணங்களில் போட்டோ எடுத்திருந்தது. இதனையடுத்து தரையிறங்கிய தருணத்தையும், பிரக்யான ரோவர் நிலவை தொட்ட தருணத்தையும் விக்ரம் லேண்டர் கேமிரா கச்சிதமாக படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்தது. இதனை இஸ்ரோ வெளியிட்டது. இதனையடுத்து தனது வேலையை தொடங்கிய பிரக்யான் ரோவர் நிலவை மிக நெருக்கமாக சில படங்களை எடுத்து அனுப்பியது.

இந்நிலையில் முதன் முறையாக தன்னை பத்திரமாக கொண்டு வந்து இறக்கிய விக்ரம் லேண்டரையும் NavCam கேமரா மூலம் பிரக்யான் ரோவர் போட்டோ எடுத்திருக்கிறது. இந்த படங்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+