இந்தியையா திணிக்கிறீங்க.. பெங்களூரில் ஹோட்டலை அடித்து நொறுக்கிய கன்னட அமைப்பினர்! மத்திய குழு ஷாக்
பெங்களூர்: பெங்களூரில் ‛இந்தி திவாஸ்' நிகழ்ச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற இருந்தது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ‛ராஜபாஷா சமீதி' என்ற குழுவை சேர்ந்த பிரதிநிதிகள் பெங்களூர் வந்தனர். இதற்கு கர்நாடகா ரக்சன வேதிகே அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் ஆக்ரோஷமான கன்னட அமைப்பினர் நிகழ்ச்சி நடைபெற இருந்த ஹோட்டலுக்குள் நுழைந்து இந்தியில் இருந்த பேனர்களை கிழித்து, சேர், டேபிளை அடித்து நொறுக்கினர். இதனால் மத்திய குழுவினர் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர்.
மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயன்று வருவதாக தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களில் செயல்பட்டு வரும் அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழ்நாட்டை போல் கர்நாடகாவிலும் இந்தி மொழிக்கு கடும் எதிர்ப்பு உள்ளது.

இந்நிலையில் தான் பெங்களூர் தாஜ் வெஸ்ட் என்ற 5ஸ்டார் ஹோட்டலில் கடந்த 3 நாட்களாக ‛இந்தி திவாஸ்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் எதிர்ப்பையும் மீறி நேற்று ‛இந்தி திவாஸ்' நிகழ்ச்சி தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ‛ராஜபாஷா சமீதி'யை சேர்ந்த 6 பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதையடுத்து நாராயண கவுடா தலைமையிலான கர்நாடகா ரக்சன வேதிகே அமைப்பை சேர்ந்தவர்கள் ஹோட்டல் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள், ‛‛இந்தி பேசாத மாநிலங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க பார்க்கிறது. இதற்காக ‛இந்தி திவாஸ்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது'' என்று கூறினர். அதுமட்டுமின்றி இந்தி திவாஸ் நிகழ்ச்சிக்கும், இந்தி திணிப்பு நடவடிக்கையை கண்டித்தும் கோஷமிட்டனர். இதனால் ஹோட்டலின் நுழைவுப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் கோபமான கன்னட அமைப்பினர் ஹோட்டலுக்குள் நுழைந்து ‛இந்தி திவாஸ்' நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் சென்றனர். அந்த அறையை அவர்கள் சூறையாடினர். அங்கிருந்த சேர், டேபிளை உடைத்தனர். இந்தி மொழியில் இருந்த பேனர்களை கிழித்தனர். இதனால் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். நிகழ்ச்சியை பாதியில் கைவிட்டு தங்களின் இருக்கைகளில் இருந்து சென்றனர்.
இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த ஹைகிரவுண்ட் போலீசார் விரைந்து வந்தனர். கன்னட அமைப்பினரை கைது செய்தனர். மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛நாடாளுமன்ற அலுவலல் மொி கமிட்டி சார்பில் செப்டம்பர் 23ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்தி திவாஸ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கடைசி நாளான நேற்று காலை 10.45 மணி முதல் 11மணிக்குள் கன்னட அமைப்பை சேர்ந்த 30 முதல் 40 பேர் வந்து ஹோட்டலுக்குள் நுழைந்தனர். இதனால் அந்த நிகழ்ச்சிக்கு பிரச்சனை ஏற்பட்டது. மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்'' என்று கூறினர்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications