எவ்வளவு சொல்லியும் கேக்கலியே... சொல்லாமல் போய்ட்டீயே... நடிகை சேத்தனா ராஜ் தந்தை கண்ணீருடன் கதறல்
பெங்களூர்:பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நிலையில் கன்னட சின்னத்திரை நடிகை சேத்தனா ராஜ் பலியாகி உள்ளார். சர்ஜரி வேண்டாம் என கூறிய நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் மருத்துவமனையில் சேர்ந்து சேத்தனா ராஜ் இறந்ததாக கூறி அவரது தந்தை கண்ணீர்விட்டு கதறி அழுதது நெஞ்சை உருக்கியது.
பெங்களூர் அப்பிக்கெரேவில் வசித்து வந்தவர் சேத்தனா ராஜ் (வயது 21). இவர் கீதா, துரெசானி உள்ளிட்ட பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார். இவர் நடித்த ‛ஹவையன்' படம் இன்னும் வெளியாகவில்லை.

சேத்தனா ராஜ் இறப்பு
இந்நிலையில் தான் சேத்தனா ராஜ் பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொழுப்பை குறைக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவு செய்தார். நேற்று பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். நேற்று மதியம் பிளாஸ்டிக் சர்ஜரி நடந்தது. இதையடுத்து நுரையீரலில் நீர் தேங்கி அவர் இறந்தார்.

பெற்றோருக்கு தெரியாமல் சிகிச்சை
இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் சேத்தனா ராஜ் தனது பெற்றோரான வரதராஜ்-முனிலட்சுமி தம்பதிக்கு தெரியாமல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர் தனது நண்பர்களுடன் மருத்துவமனைக்கு சென்றது தெரியவந்துள்ளது.

சொல்லாமலே சென்றுவிட்டாள்
இதுபற்றி சேத்தனா ராஜின் தந்தை வரதராஜ் கூறுகையில், ‛‛திங்கட்கிழமை காலையில் சுமார் 8 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்று மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். எங்களுக்கு இதுபற்றிய விஷயம் தெரிவதற்குள் சர்ஜரி நடந்து முடிந்துவிட்டது. மாலையில் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. சர்ஜரி செய்த மருத்துவமனையில் ஐசியூ உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. இதனால் அவர் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளார். முன்னதாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டாம் என நானும், எனது மனைவியும் கூறினோம். இதனால் எங்களிடம் சொல்லாமல் மருத்துவமனைக்கு வந்துள்ளார். என்மகளின் சாவுக்கு மருத்துவமனை நிர்வாகம் தான் காரணம்'' என கண்ணீர் சிந்தினார்.

சிலரது பேச்சை கேட்டு சர்ஜரி
இதுபற்றி சேத்தனா ராஜின் தந்தை வரதராஜ் கூறுகையில், ‛‛திங்கட்கிழமை காலையில் சுமார் 8 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்று மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். எங்களுக்கு இதுபற்றிய விஷயம் தெரிவதற்குள் சர்ஜரி நடந்து முடிந்துவிட்டது. மாலையில் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. சர்ஜரி செய்த மருத்துவமனையில் ஐசியூ உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. இதனால் அவர் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளார். முன்னதாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டாம் என நானும், எனது மனைவியும் கூறினோம். இதனால் எங்களிடம் சொல்லாமல் மருத்துவமனைக்கு வந்துள்ளார். என்மகளின் சாவுக்கு மருத்துவமனை நிர்வாகம் தான் காரணம்'' என கண்ணீர் சிந்தினார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications