‛எமோஷனல் கனெக்ட்’.. தற்கொலை முடிவை கைவிட்ட நடிகை ரம்யா! அம்மாவுக்கு அடுத்து ராகுல் தானாம்!உருக்கம்
பெங்களூர்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பியும், நடிகையுமான ரம்யா தான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தபோது ராகுல் காந்தி தான் ஆதரவு அளித்ததாகவும், அம்மாவுக்கு பிறகு தனக்கு ராகுல் காந்தி தான் என உருக்கமாக கூறியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கர்நாடகாவை சேர்ந்தவர் நடிகை ரம்யா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றார். தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
நடிகை ரம்யா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வருகிறார். கடந்த 2012ம் ஆண்டில் நடிகை ரம்யா திரையுலகில் கொடிகட்டி பறந்தபோதே காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தார். இளைஞர் காங்கிரஸில் இணைந்து செயல்பட தொடங்கினார்.

மண்டியா எம்பியான நடிகை ரம்யா
மண்டியா நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த 2013ல் நடந்த இடைத்தேர்தலில் நடிகை ரம்யா போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியானார். அதன்பிறகு 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரம்யா தோல்வியடைந்தார். ரம்யாவை ஜேடிஎஸ் கட்சியின் வேட்பாளர் சிஸ் புட்டராஜூ 5,500 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவராக நடிகை ரம்யா செயல்பட்டார்.

மீண்டும் லைம்லைட்டில் நடிகை ரம்யா
அதன்பிறகு அந்த பதவியில் இருந்து விலகிய ரம்யா தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நடிகை ரம்யா பற்றிய பல்வேறு விஷயங்கள் வெளியாகி வருகின்றன. கர்நாடகா சட்டசபை தேர்தலில் அவர் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகின. மேலும் நடிகை ரம்யா மூலம் நடிகர் கிச்சா சுதீப்பை காங்கிரஸ் கட்சியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. இதுமட்டுமின்றி ரம்யா விரைவில் பாஜகவில் இணைவதாகவும் இணையதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் மீண்டும் ரம்யா லைம்லைட்டில் வந்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில்..
இந்நிலையில் தான் நடிகை ரம்யா தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதாவது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‛வீக்எண்ட் வித் ரமேஷ்' சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பங்கெடுத்தார். இந்த நிகழ்ச்சியை நடிகர் ரமேஷ் அரவிந்த் தொகுத்து வழங்கி வரும் நிலையில் ரம்யா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் நடிகை ரம்யா தனது வளர்ப்பு தந்தை ஆர்டி நாராயண் கடந்த 2013ல் மறைந்தபோது ஏற்பட்ட சம்பவம் குறித்தும், ராகுல் காந்தி பற்றியும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதுபற்றி நடிகை ரம்யா கூறியதாவது:

2 வாரத்தில் நாடாளுமன்றத்தில்..
என் அப்பா ஆர்டி நாராயண் மறைந்த பிறகு 2 வாரம் கழித்து நான் நாடாளுமன்றத்தில் இருந்தேன். அப்போது எனக்கு யாரையுமே தெரியாது. சொல்லப்போனால் நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் எப்படி இருக்கும்? என்பது கூட நான் அறிந்தது இல்லை. அதன்பிறகு நான் கற்றுக்கொண்டேன். எனக்குள் இருந்த வருத்தத்தை மறக்க பணி செய்ய தொடங்கினேன். இதற்கு மண்டியா மக்கள் ஆதரவு கொடுத்தனர்.

அம்மாவுக்கு அடுத்து ராகுல் காந்தி தான்
என் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய முதல் நபர் என்றால் அது எனது அம்மா. அதன்பிறகு எனது அப்பா. மூன்றாவதாக ராகுல் காந்தி. ஏனென்றால் நான் என் தந்தையை இழந்தபோது மிகவும் மனம்வருந்தி இருந்தேன். வாழ்க்கையை முடித்து கொள்ள தற்கொலை செய்ய நினைத்தேன். மேலும் 2014 தேர்தலிலும் தோற்றேன். துக்கம் நிறைந்த காலமாக அது இருந்தது. அந்த நேரத்தில் ராகுல் காந்தி தான் எனக்கு ஆதரவாக இருந்தார். எமோஷனல் கனெக்ட்டாக ராகுல் காந்தி இருந்து ஆதரவு வழங்கினார்'' என கூறினார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications