32 நர்சிங் மாணவிகளுக்கு கொரோனா.. கேரளா சென்று வந்தார்களாம்.. கல்லூரிக்கு சீல்.. கர்நாடகா ஷாக்
32 நர்சிங் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஒரு கல்லூரியில் 32 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. அத்தனை பேருக்கும் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.. இந்த மாணவர்களில் சிலர் சமீபத்தில்தான் கேரளாவுக்கு சென்று வந்ததும் தெரியவந்துள்ளதையடுத்து, அந்த கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கர்நாடகாவில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு வரை தொற்று உச்சத்தில் இருந்தது.. இதையடுத்து, அந்த மாநிலமும் பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்ததன் அடிப்படையில் ஓரளவு பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில் 1,217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், அம்மாநிலத்தில் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 49 ஆயிரத்து 445 ஆக அதிகரித்துள்ளது... இப்போதைக்கு 18 ஆயிரத்து 386 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.. கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்... இதுவரை இந்த மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 318 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகா
தற்போது ஓரளவு குறைந்து வருவதையடுத்து, அம்மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.. அதன்படி, செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நாகேஷ் அறிவித்துள்ளார்.. எனவே, தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன.

மாணவர்கள்
இதுபோலவே கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன... ஆனால், கொரோனா விதிகளை பின்பற்றி, 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படுகிறது... அதாவது ஒரு வாரத்தில் ஐந்து நாட்களுக்கு மட்டுமே பள்ளிகள் செயல்படுகிறது... மாணவர்களும் மாஸ்க் போட்டுக் கொண்டுதான் வருகிறார்கள்.. சமூக இடைவெளிகளை கிளாஸ் ரூம்களில் கடைப்பிடிக்கிறார்கள். அப்படித்தான் கோலாரில் உள்ள ஒரு கல்லூரியும் திறக்கப்பட்டது..

கேரளா
ஆனால், ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. அந்த கல்லூரியில் 32 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது... இந்த மாணவர்களில் சிலர் சில தினங்களுக்கு முன்பு கேரளாவுக்கு சென்று வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது... இதையடுத்து சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.. அங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது...

நர்சிங் மாணவிகள்
இந்தியாவிலேயே கேரளாவில்தான் தொற்று அதிகமாக உள்ளது.. அப்படி இருக்கும்போது, கல்லூரி மாணவர்களை கேரளா செல்ல அனுமதித்த கல்லூரி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர் தெரிவித்துள்ளார்... அந்த நர்சிங் மாணவிகள் 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நர்சிங் கல்லூரியை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் நேரில் பார்வையிடவும் உள்ளார்.

கேரளா
கேரளாவின் எல்லையில்தான், கர்நாடகாவின் கோலார் மாவட்டமும் உள்ளது.. கோலாரில் தினமும் நூற்றுக்கணக்கான கேரள மக்கள் வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வந்து போவதுண்டு.. எனவே, கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலையும் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, கேரளாவில் இருந்து கர்நாடகா வரும் அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும் என்று கர்நாடக சுகாதாரத்துறை கண்டிப்புடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications