எதே.. மருது பாண்டியர்களுக்கு மாறுவேசமா? கவுடா பிரதர்ஸ் என கர்நாடக பாஜக பிரச்சாரம்! வெடித்த சர்ச்சை
வரலாற்று ஆய்வாளர்களால் முழுக்க முழுக்க கற்பனை கதாபாத்திரங்கள் என்று கூறப்படும் இந்த உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா சகோதரர்களை நிஜம் என்று சொல்கிறது பாஜக.
பெங்களூரு: கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அம்மாநிலத்தில் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான கவுடாக்களை கவர பாஜக உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா சகோதரர்கள் பற்றி பேசி வரும் நிலையில் மருது பாண்டியர்களை போன்ற படங்களை பேனர்களில் பயன்படுத்தி வருகிறது.
கர்நாடகாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு முதலமைச்சர் பதவியை காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது.
இதனால் எடியூரப்பாதான் பதவியேற்ற முதல்நாளே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பே பதவியும் விலகினார். கவுடா சமுதாயத்தை சேர்ந்த குமாரசாமி முதலமைச்சரானார்.

பவசராஜ் பொம்மை
ஆனால், 2019 ல் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கவர்ந்த பாஜக அவர்களை பதவி விலக செய்து மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. இந்த நிலையில் எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைந்தது. அடுத்த சில ஆண்டுகளிலேயே எடியூரப்பாவுக்கு எதிராக பாஜகவினர் போர்க்கொடி தூக்கியதால் அவரும் பதவி விலக, பசவராஜ் பொம்மை ஆட்சிக்கு வந்தார்.

சாதி வாக்குகள்
இந்த நிலையில் பாஜக அரசு ஆட்சிகாலம் மே மாதத்துடன் முடிவடைய இருப்பதால் இன்னும் ஒரு மாதத்திற்குள் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது கர்நாடகா. குமாரசாமி அரசை கவிழ்ந்ததால் ஒரு பக்கம் வோகாலிகா எனப்படும் கவுடா சாதியினரின் அதிருப்தியையும் மறுபக்கம், எடியூரப்பாவை ஓரம் கட்டியதால் அவரது லிங்காயத்து சமூக மக்களின் அதிருப்தியையும் பெற்றது பாஜக.

பாஜகவின் திட்டம்
அண்மையில் வெளியான லோக் போல் நிறுவன கருத்துக்கணிப்பின்படி, பாஜக தோல்வியடையும் என்றும், காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த பாஜக பல்வேறு வியாகங்களை வகுத்து அங்கு பிரச்சாரங்களை தொடங்கி இருக்கிறது. குறிப்பாக வோக்கலிகா மற்றும் லிங்காயத்துக்கு மக்களை கவரும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

கவுடா சகோதரர்கள்
அந்த வகையில், லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த எடியூரப்பாவை சமீக காலமாக மீண்டும் முன்னிலைப்படுத்தி வருகிறது பாஜக. அதேபோல், கவுடா மக்களை ஈர்க்கும் வகையில் உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா சகோதரர்கள் குறித்து தற்போது பேசத் தொடங்கி உள்ளது. இந்த இருவரும்தான் திப்பு சுல்தானை கொன்றார்கள் என பாஜக தெரிவித்து வருகிறது.

மருது பாண்டியர்கள் படம்
வரலாற்று ஆய்வாளர்களால் முழுக்க முழுக்க கற்பனை கதாபாத்திரங்கள் என்று கூறப்படும் இந்த உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா சகோதரர்களை தமிழ்நாட்டில் வாழ்ந்த மருது பாண்டிய சகோதர்களைபோல் உண்மையில் வாழ்ந்த போராளிகள் என்று பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால், அதற்கு மருது பாண்டியர்களின் உருவத்தை சார்ந்து உள்ள படத்தை பயன்படுத்தியதுதான் கொடுமை.

பாஜக பிரச்சாரம்
ஆம், கர்நாடகாவில் பாஜகவினர் வைத்து இருக்கும் பேனர்கள், வரவேற்பு வளைவுகளில் எல்லாம் மருது பாண்டிய சகோதரர்களை போன்ற படத்தை போட்டு உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா சகோதரர்கள் பாஜக பிரச்சாரம் செய்து இருக்கிறது. அக்கட்சியை சேர்ந்த சிடி ரவியே ட்விட்டரில் இந்த படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ்நாடு பாஜக
கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக அலுவலகத்தில் மருது சகோதரர்களின் உருவப்படத்திற்கு அண்ணாமலை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஆனால், அச்சு அசல் அதே மாதிரி படங்களை கர்நாடக பாஜகவினர் கவுடா சகோதர்கள் என்று கூறி பதிவிட்டு வருகிறார்கள். மன்னர்கள் தோற்றத்தை ஓவியர்கள் ஒரே மாதிரி வடிப்பது வழக்கம் என்றாலும், இது அசலாக மருது சகோதரர்களை போலவே உள்ளதுதான் சர்ச்சைக்கு காரணம்.

கவுடா சகோதரர்கள் குறித்து திரைப்படம்
குறிப்பாக கர்நாடக அமைச்சரும் தயாரிப்பாளருமான முனிரத்னா, கவுடா சகோதரர்களின் கதையை படமாக எடுப்பதாகவும் இதற்கு அம்மாநில உயர்கல்வி அமைச்சர் அஸ்வத் நாராயணன் கதை எழுத இருப்பதாகவும் போஸ்டர்களை வெளியிட்டார். அதிலும் மருது சகோதரர்களின் புகைப்படங்களையே பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு கவுடா சமுதாயத்தினரே எதிர்ப்பு தெரிவிக்க அந்த படத்தின் பணிகளை நிறுத்துவதாக அறிவித்து உள்ளார்.

திப்பு சுல்தானையே கொன்றார்களாம்
மத்திய அமைச்சர் சோபாவோ, உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா சகோதரர்கள் திப்பு சுல்தானை கொன்றார்கள் என்று கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அம்மாநிலத்தை சேர்ந்த ஆதிசுன்சனாகிரி மகாசமஸ்தான மடத்தின் சாமியார் நிர்மலானந்தா தெரிவிக்கையில், பாஜக தேர்தலுக்கு முன் சாதி வாக்குகளை ஈர்க்க திட்டமிட்டு உள்ளது என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications