கர்நாடகாவில் பட்ஜெட் தாக்கல் செய்த பாஜக அரசு..காதில் பூ வைத்து வந்த காங்.எம்எல்ஏக்கள்..ஏன் தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று முதல்வர் பசவராஜ் பொம்மை பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனிடையே, பட்ஜெட் தாக்கலின் போது சட்ட சபைக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காதில் பூ வைத்து இருந்தனர்.
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 2½ மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போதே அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்த பசவராஜ் பொம்மை
ஆளும் பாஜகவோ ஆட்சியை இழந்து விடக்கூடாது என்பதில் விடாப்படியாய் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அடிக்கடி கர்நாடா வருகை தருகின்றன. மறுபக்கம் பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் கர்நாடகம் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். இத்தகைய அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இன்று கர்நாடக சட்ட சபையில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பட்ஜெட் தாக்கல் செய்தார்.

2 மணி நேரத்திற்கும் மேலாக
தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யும் பட்ஜெட் என்பதால் பல்வேறு கவரச்சிகர அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெற்று வருகிறது. கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் (வங்கிகள், பள்ளி- கல்லூரிகள், தொழில்துறை நிறுவனங்கள்) அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் மற்றும் ராம்நகராவில் ராமர் கோவில் கட்டப்படும், பெங்களூர் மெட்ரோ விரிவாக்கம் என பல்வேறு அறிவிப்புகளை பட்ஜெட் உரையில் பசவராஜ் பொம்மை வெளியிட்டார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அவரது பட்ஜெட் உரை நீடித்தது.

காதில் பூ வைத்துக்கொண்டு
இந்த நிலையில், இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்திருந்த எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா உள்பட காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் அனைவரும் காதில் பூ வைத்துக் கொண்டு வந்தனர். சட்டசபை நடவடிக்கையில் பங்கேற்கும் போது காதில் இருந்த பூவை எடுக்கவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் போது தேர்தல் வாக்குறுதியில் அளித்த எந்த திட்டங்களையும் இதுவரை நிறைவேற்றவில்லை..அதேபோல், கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட திட்டங்களையும் நிறைவேற்றாமல் மக்களை பாஜக அரசு ஏமாற்றிவிட்டதை சுட்டிக்காட்டும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காதில் பூ வைத்துக்கொண்டு அவை நடவடிக்கையில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ட்ரெண்ட் ஆகும் KiviMeleHoova
கர்நாடக முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான சித்தராமையா, தேர்தல் வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தேர்தல் அறிக்கையில் 600 வாக்குறுதிகளை அளித்த பாஜக அதில் 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றியிருப்பதாகவும் சித்தராமையா பல்வேறு தருணங்களில் பாஜக அரசை விமர்சித்து வந்தார். இந்த நிலையில் தான் கர்நாடக மக்கள் ஏமாற்றப்படுவதை வெளிப்படுத்தும் அடையாளமாக காதில் பூ வைத்துக் கொண்டு வந்து இருக்கின்றனர். காதில் பூ என்ற பொருள் படும் வார்த்தையான #KiviMeleHoova என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்












Click it and Unblock the Notifications