பெண்களுக்கு மாதம் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு.. கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடக அரசு, பெண்கள் நலன் மற்றும் பணியிடங்களில் அனைவரையும் உள்ளடக்கிய சூழலை மேம்படுத்தும் நோக்கில், மாதவிடாய் விடுமுறை கொள்கை 2025-க்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்கையின் கீழ், பெண்கள் மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த மாதவிடாய் விடுமுறை கொள்கையானது அரசு அலுவலகங்கள், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பிற தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பொருந்தும். இந்தக் கொள்கை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்ட 6 மாதவிடாய் விடுமுறைகள் என்ற திட்டத்திலிருந்து, தற்போது ஆண்டுக்கு 12 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் வகையில் இந்தக் கொள்கை மேம்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறுகையில், "பெண்களுக்கு மாதவிடாய் விடுப்புக்கு நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம். இது நாம் கொண்டு வந்துள்ள மிகவும் முற்போக்கான புதிய சட்டம். பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சிக்கு ஏற்ப, ஒரு மாதத்துக்கு ஒரு முறை அல்லது ஒரே நேரத்தில் என மொத்தம் 12 நாள்கள் வரை விடுப்பு எடுக்கலாம். இது பெண்களின் நலனை சிந்திக்கும் ஒரு முற்போக்கான அரசின் பெருமைக்குரிய விஷயம்" என்று தெரிவித்தார்.
கேரளாவில், தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் பெண்களுக்கு மாதந்தோறும் இரண்டு நாள்கள் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுகிறது. அதேபோல, பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்கள் ஆண்டுக்கு 12 நாள்கள் மாதவிடாய் விடுப்பு வழங்குகின்றன. ஆனால், இவை மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த மாதவிடாய் விடுப்பு என்பது, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், பெண்கள் தங்கள் உடல் நலத்தை பேணி, பெண்களின் பணிச் சூழலை மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்த விடுப்பு, பெண்களின் ஆரோக்கியத்துக்கும், அவர்களின் பணி வாழ்க்கையை சமநிலைப்படுத்தவும் உதவும். பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் வலியை உணர்ந்து, அவர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு நல்ல முயற்சி என்று அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்படுகிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா மாநிலங்களில் மாதவிடாய் கால விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications