ஒருவழியாக தமிழகத்திற்கு தண்ணீர் தந்தது கர்நாடகா.. காவிரியிலிருந்து 855 கனஅடி நீர் திறப்பு
பெங்களூரு: காவிரியிலிருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. தற்போதையை நிலவரப்படி கபினி அணையிலிருந்து 500 கனஅடி தண்ணீரும், கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 355 கனஅடி தண்ணீரும் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் குடகு பகுதியில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடும்படி தமிழகம் வலியுறுத்தியது.
தமிழகத்தின் வாதத்தை கேட்டாலும் மழை பெய்து கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரிக்கும் போது, காவிரியிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என மேலாண்மை ஆணையம் கூறியது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தால் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரிலும், மாண்டியா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் காவிரியில் இருந்து விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என அண்மையில் கர்நாடக முதல்வர் கூறியிருந்தார்.
இந்நிலையில் கர்நாடகத்தின் காவிரி பிடிப்பு பகுதிகளில் கடந்த நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் குடகு பகுதியில் விரைவில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது திறக்கப்பட்டுள்ள காவிரி நீர் பிலிக்குண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல்லுக்கு வந்தடையும்.
கர்நாடகத்தில் தொடர்ந்து நல்ல மழை பெய்வதால் அம்மாநில அணைகளில் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அதிகரிக்கும்பட்சத்தில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications