இதுதான் வேலைக்கு வர்ற நேரமா.. ராஜினாமா செஞ்சுட்டு போங்க.. அதிகாரிகளுக்கு செம்ம டோஸ் விட்ட எடியூரப்பா
பெங்களூரு: கர்நாடகாவில் தலைமைச் செயலகத்துக்கு வந்த முதல்வர் எடியூரப்பா, அங்கு காலை 10.30 மணிக்கு கூட வராத அதிகாரிகளுக்கு செம்ம டோஸ் விட்டதோடு வேலைக்கு சரியான நேரத்திற்கு வர முடியாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டு போங்க என்று கண்டித்தார்.
கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவி ஏற்ற நாள் முதலே பல அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார். அங்கு பணிபுரியும் துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்து எப்படி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து விவாதித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தலைமைச் செயலகத்துக்கு வந்த பொதுமக்கள், சமூக நலத்துறை அதிகாரிகளை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்தார். இந்த விவாகரம் எடியூரப்பாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

சிலர் மட்டுமே
இதையடுத்து அதிரடி ஆய்வுக்காக நேற்று காலை 10.15 மணிக்கே தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் எடியூரப்பா வந்தார். தனது அறையில் இருந்து சமூக நலத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு சில ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். உயர் அதிகாரிகள் வரவில்லையா என்று அவர்களிடம் எடியூரப்பா கேட்டுள்ளார். ஆனால் ஊழியர்கள் இன்னும் வரவில்லை என்று பதில் அளித்துள்ளனர்.

ஊழியர்கள் தாமதம்
இதனால் கோபம் அடைந்த எடியூரப்பா அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு அதிகாரிகளின் வருகைக்காக காத்திருந்தார். முதல்வர் காத்திருக்கிறார் என்பதை அறியாமல் சாவகாசமாக காலை 11 மணிக்கு அதிகாரிகள் ஒவ்வொருவராக வந்துள்ளார்கள்.

முதல்வர் கண்டிப்பு
அங்கு முதல்வர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் பதறிபோயினர். அவர்களை பார்த்து ஆத்திரம் அடைந்த முதல்வர் எடியூரப்பா இதுதான் வேலைக்கு வரும் நேரமா? உயர் அதிகாரிகளான நீங்களே இப்படி தாமதமாக வந்தால் மற்ற ஊழியர்கள் எப்படி சரியான நேரத்திற்கு வேலைக்கு வருவார்கள் என்று கடிந்து கொண்டார்.

கால்கடுக்க நிற்கிறாங்க
மேலும் அதிகாரிகளை உரிய நேரத்தில் வேலைக்கு வர முடியவில்லை என்றால் வேலையை ராஜினாமா செஞ்சுட்டு போயிடுங்க என்று கடுமையாக எச்சரித்தார். சரியான நேரத்திற்கு நீங்கள் வந்தால் ஏன் பொதுமக்கள் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட போகிறது என்று முதல்வர் கேள்வி எழுப்பினார். மேலும் இனியாவது சரியான நேரத்திற்கு வர வேண்டும். இல்லாவிட்டால் வேலையில் இருக்க வேண்டாம். வீட்டுக்கு போங்க என்று கடுமையாக கண்டித்துவிட்டு அங்கிருந்து முதல்வர் எடியூரப்பா புறப்பட்டு சென்றார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications