முதல்வர் ஸ்டாலினுக்கு சித்தராமையா திடீர் கடிதம்.. தமிழகத்தின் நிலைப்பாட்டுக்கு கர்நாடகா சப்போர்ட்
சென்னை: மத்திய மாநில அரசு உறவுகள் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அடிப்படையில் மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து புதிய தேசிய விவாதம் தேவை என்றும், அரசியல் சாசனம் மாற்றம் குறித்தும் கருத்து தெரிவிக்க ஒத்த கருத்துடைய மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் சித்தராமையா பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
தமிழகத்தில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் உள்ள சாரம்சங்கள் குறித்து ஒத்த கருத்துகள் உடைய மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

மத்திய அரசு ஆளும் மாநிலங்கள் மற்றும் இதர மாநிலங்களுக்கு அளிக்கும் நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டுவதாக கூறி வரும் ஸ்டாலின், இதற்கு மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே சரியாக இருக்கும். மேலும் அதன் அடிப்படையில் மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து புதிய தேசிய விவாதம் தேவை என்றும், அரசியல் சாசனம் மாற்றம் குறித்தும் கருத்து தெரிவிக்க ஒத்து கருத்துடைய மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் தான் ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், "இது ஒரு நல்ல விஷயம்.. அரசியல் சாசனத்தை திருத்துவதற்கு சரியான நேரம்.. கர்நாடக அரசும் இதற்கு ஒப்புதல் தருகிறது.
இந்த விஷயத்தை பொறுத்தவரை கவுன்சில் ஆஃப் மினிஸ்டர்களை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பதில் தமிழக அரசோடு கர்நாடக அரசும் ஒத்துப் போகின்றது. இதில் ஒத்த கருத்துடைய மாநில அரசுகள் ஒன்று சேர்ந்தால் நானும் ஒன்று சேர்வேன்" என்று அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் நன்றி தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி வைப்பதில் இழுபறி நீடித்து வருவதால் அதற்கு சமாதானம் செய்யும் வகையில் இந்த பதிவு அமைந்திருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications