சித்தராமையாவுக்கு நெருக்கடி: அமலாக்கத்துறையால் 'முடா' நடேஷ் அதிரடி கைது! மாஜி கமிஷனர் தப்பி ஓட்டம்!
பெங்களூர்: முடகா முறைகேடு வழக்கில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு அமலாக்கத்துறையால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முடாவின் முன்னாள் இயக்குநர் நடேஷை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் முடா முன்னாள் ஆணையர் தினேஷ் தலைமறைவாகிவிட்டதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமான முடா, 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. இந்த வீட்டு மனை ஒதுக்கீடுகள் சட்டவிரோதம் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறையும் களமிறங்கியது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் போது முடாவின் முன்னாள் கமிஷனர் தினேஷ் தப்பி ஓடிவிட்டார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
மேலும் முடா முன்னாள் இயக்குநர் நடேஷ் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் போது முடா நிறுவனம் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இதனையடுத்து முடா நடேஷை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் முதல்வ சித்தராமையாவுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications