அரசு ஊழியர்களுக்கு அடுத்த 3 மாதம் லீவு கிடையாது.. எடியூரப்பா தடாலடி.. பின்னணியில் எஸ்கேப் தந்திரம்
பெங்களூர்: அடுத்த 3 மாதங்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை கூட வேலை பார்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.
கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த நிலையில், எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து பல அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.
பெங்களூர் நகர போலீஸ் கமிஷனராக, முன்னாள் முதல்வர் குமாரசாமியால் நியமிக்கப்பட்ட அலோக் குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, பாஸ்கர் ராவ் கமிஷனராக்கப்பட்டுள்ளார்.

லீவு கிடையாது
இந்த நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், ஜில்லா பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் நிருபர்களிடம் பேசிய எடியூரப்பா, அடுத்த 3 மாதங்களுக்கு, வறட்சி நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட வசதியாக, லீவு எடுக்க வேண்டாம் என்றும், அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

விவசாயிகள்
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு, எந்த தாமதமும் இன்றி, இழப்பீடு வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், தீவன உற்பத்தியையும் ஊக்குவிக்க வேண்டும்.

தப்பாக பயன்படுத்த கூடாது
அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் அரிசி விநியோகத்தை சீராக்கவும், எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறாமல் தடுக்கவும், கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.

எஸ்கேப் ஆகும் எடியூரப்பா
கர்நாடகாவில் இந்த வருடம் போதிய பருவமழை பெய்யவில்லை. எனவே சுமார் 80 தாலுகாக்கள் வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வறட்சி நிவாரண நடவடிக்கையை எடுக்க விடாமல், கூட்டணி ஆட்சியை கலைப்பதில் எடியூரப்பா முக்கிய பங்கு வகித்தார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே, அதிகாரிகளுக்கு லீவு கொடுக்காமல் உழைக்க வைத்து, தனக்கு எதிராக, வரும் விமர்சனங்களில் இருந்து தப்பிக்க எடியூரப்பா முயல்வதாக கூறப்படுகிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications