காங்கிரசுக்கு தான் அதிக ஓட்டு கிடைக்கும்..ஆனால் ஆட்சியை பிடிப்பது பாஜக தானாமே! எப்படி? புது சர்வே
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக சுவர்ணா நியூஸ் 2வது கருத்து கணிப்பு முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சி அதிக ஓட்டு சதவீதத்தை பெற்றாலும் கூட பாஜக தான் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:
கர்நாடகா சட்டசபை தேர்தல் வரும் 10ல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தான் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது சுவர்ணா நியூஸ் சார்பில் 2வது கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 முதல் மே 1ம் தேதி வரைசுமார் 30 ஆயிரம் பேரிடம் இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது.

இந்த கருத்து கணிப்பின்படி மாநிலத்தில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக ஓட்டு சதவீதத்தை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாஜக தான் 113 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 38.5 சதவீதம் முதல் 41.5 சதவீதம் வரை ஓட்டுகள் பெறும். பாஜக 38 முதல் 40.5 ச சதவீதம் வரையும் ஜேடிஎஸ் கட்சி 14 முதல் 16.5 சதவீதம் வரையும் ஓட்டுகள் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கூட பாஜக தான் மெஜாரிட்டியை தொடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாஜக 110 முதல் 114 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி கட்டாயம் எனும் நிலையில் இந்த முடிவு வந்துள்ளது. மாறாக காங்கிரஸ் கட்சி 89 முதல் 97 இடங்களில் வெற்றி பெறும் எனவும், ஜேடிஎஸ் கட்சி 20 முதல் 26 தொகுதிகளில் வெற்றி பெறலாம் எனவும், மற்றவர்கள் பூஜ்ஜியம் முதல் 5 சீட் வரை வாகை சூடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக ஓட்டு சதவீதம் கிடைத்தாலும் கூட அதனை தொகுதி வாரியாக வெற்றியாக மாற்றும் சக்தி இல்லை. மாறாக பாஜகவுக்கு ஓட்டு சதவீதம் காங்கிரஸை விட குறைவாக இருந்தாலும் கூட தொகுதி வாரியாக வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என சுவர்ணா நியூஸ் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இந்த கருத்து கணிப்பால் தற்போது காங்கிரஸ் கட்சியினர் சிக்கலில் சிக்கி உள்ளனர்.
ஏனென்றால் கடந்த 2018 சட்டசபை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போதும் கூட பாஜகவின் ஓட்டு சதவீதம் வெறும் 36.5 சதவீதமாக தான் இருந்தது. மாறாக காங்கிரஸ் கட்சியின் ஓட்டு சதவீதம் 38 என்ற அளவில் இருந்தாலும் கூட இந்த கட்சி பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இறுதிக்கட்ட பிரசாரத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொரு தொகுதியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி












Click it and Unblock the Notifications