Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகளுக்கு என்ன செஞ்சீங்க? காங்கிரஸ் அரசை விளாசிய சொந்த கட்சி எம்எல்ஏ! தற்கொலை மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் அரசு நடந்து வருகிறது. இந்நிலையில் தான் விவசாயிகளுக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி ஒன்றுமே செய்யவில்லை.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா செயல்பட்டு வருகிறது. அதேபோல் பெலகாவி மாவட்டம் காக்வாட் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக பரமகவுா காகே என்ற ராஜூ காகே இருக்கிறார்.

karnataka congress raju kage

இந்நிலையில் தான் ராஜூ காகே தற்போது ஆளும் சொந்த கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். அதுமட்டுமின்றி பெங்களூர் விதான சவுதாவில்(கர்நாடகா தலைமை செயலகம்) தற்கொலை செய்து கொள்ள உள்ளதாகவும் மிரட்டல் விடுத்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.

அதாவது காங்கிரஸ் எம்எல்ஏ ராஜூ காகே நேற்று தனது சொந்த தொகுதியான காக்வாட்டில் உள்ள தாவஷி கிராமத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛கர்நாடகா அரசு விவசாயிகளுக்கு என்று எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இதனை அரசு பரிந்து கொள்ள வேண்டும். நான் உங்களிடம் பொய் சொல்லி நடிக்க வேண்டுமா? அப்படி நான் பொய் சொன்னாலும் நாட்டில் நெல் உள்பட உணவு தானியங்கள் இல்லாவிட்டால் நாம் எதை சாப்பிடுவது?

பணத்தை நம்மால் சாப்பிட முடியுமா? முதலில் விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும். கடந்த ஓராண்டாக விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இது தொடர்ந்தால் விவசாயிகளுக்காக பெங்களூர் விதான சவுதாவி் நான் தற்கொலை செய்து உயிரை மாய்க்கவும் தயாராக இருக்கிறேன்.

விவசாயிகளுக்கு அரசால் ஏன் எதுவும் செய்ய முடியவில்லை? விவசாயிகளுக்கு உதவி செய்ய முடியாவிட்டால் நாம் அதிகாரத்தில் இருந்து என்ன பயன்? ஆளும் கட்சியின் எம்எல்ஏவாக நான் என் இயலாமையை நினைத்து வருத்தப்படுகிறேன். எதிர்காலத்தில் நான் எம்எல்ஏவாக இருக்க விரும்பவில்லை. ஏனென்றால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை என்னால் நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது'' என்று ஆக்ரோஷமாக கூறினார்.

ராஜூ காகே என்பவர் பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர். இவர் 2000, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் பாஜக சார்பில் காக்வாட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு அவர் 2018 சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தார். அதன்பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2019ல் நடந்த இடைத்தேர்தலில் தோல்வியடைந்தார். பிறகு 2023 சட்டசபை தேர்தலில் காக்வாட் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் 4வது முறையாக எம்எல்ஏவாகி உள்ள ராஜூ காகே அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் அமைச்சர் பதவி என்பது அவருக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+