திடீரென கோவிலுக்கு செல்ல மறுத்த ராகுல்.. ஷாக்கான நிர்வாகிகள்.. ட்விஸ்ட்டுக்கு பின் நெகிழ்ச்சி..செம!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் கோவிலுக்கு அழைத்தபோது ராகுல் காந்தி செல்ல மறுத்து தயங்கினார். இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ராகுல் காந்தி கேட்ட கேள்வியை பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து ராகுல் காந்தி கோவிலுக்குள் சென்றார். உண்மையில் என்ன நடந்தது? என்பது பற்றிய விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. பாஜகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும்? என்பதில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உறுதியாக இருப்பதோடு, மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றர்.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று ராகுல் காந்தி பாஜக செல்வாக்காக உள்ள உடுப்பி மாவட்டத்துக்கு சென்றார்.

உடுப்பி என்பது கடலோர மாவட்டமாக உள்ளனர். ஏராளமான மக்கள் மீன்பிடித்தல், மீன்விற்பனை தொழில் செய்து வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாக்குகளை பெறும் முனைப்பில் ராகுல் காந்தி உடுப்பி மாவட்டம் காபுவில் மீனவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது ராகுல் காந்திக்கு அஞ்சலா எனும் மீனை மீனவர்கள் பரிசாக கொடுத்தனர். இந்த மீனை ராகுல் காந்தி தொட்டு பார்த்தார். அதன்பிறகு அவர் தொடர்ந்து மீனவர்களுடன் சேர்ந்து போட்டோக்கள் எடுத்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சி முடிந்த நிலையில் உச்சிலாவில் உள்ள மகாலட்சுமி கோவிலுக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் ராகுல் காந்தியை அழைத்து சென்றனர். அப்போது கோவில் வரை சென்ற ராகுல் காந்தி உள்ளே செல்ல தயங்கினார். இதை பார்த்த காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் கோவிலுக்கு வரும்படி ராகுல் காந்தியிடம் கூறினர். அப்போது ராகுல் காந்தி, ‛‛நான் மீனை கையால் தொட்டுவிட்டேன். இன்னும் கையை கழுவவில்லை. இப்படி இருக்கும்போது கோவிலுக்கு செல்லலாமா?'' என கேட்டார்.

ராகுல் காந்தியின் இந்த கேள்வியை கேட்ட காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியடைந்ததோடு, கோவிலுக்குள் அவர் வர தயங்கியதற்கான காரணத்தை உணர்ந்து கொண்டனர். இதற்கிடையே தண்ணீர் கொண்டு வரும்படி ராகுல் காந்தி கூறினார். ஆனால் தண்ணீர் கொண்டு வரப்படவில்லை. இதற்கிடையே மீன் தொட்டாலும் பரவாயில்லை. தாராளமாக கோவிலுக்குள் வரலாம் என கோவிலில் வழிபாடு செய்பவர்கள் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் கட்சியினர் ராகுல் காந்தியை கோவிலுக்குள் அழைத்து சென்றனர். அதன்பிறகும் கோவில் கருவறை அருகே செல்லாத ராகுல் காந்தி வளாகத்திலேயே நின்று தரிசனம் செய்தார். ராகுல் காந்திக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
-
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி












Click it and Unblock the Notifications