கிரிஷ் கர்னாட் மறைவு.. கர்நாடகாவில் 3 நாள் அரசுமுறை துக்கம்.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பெங்களூர்: ஞானபீட விருது பெற்ற பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் மறைவையொட்டி, கர்நாடகாவில் மூன்று நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று, முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த கிரிஷ் கர்னாட், தமிழில், காதலன், காதல் மன்னன், மின்சார கனவு, ரட்சகன், செல்லமே, ஹேராம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இதேபோன்று ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் அவர் தனது நடிப்பு முத்திரையை பதித்துள்ளார்.

சமீபத்தில் கன்னட எழுத்து துறைக்கான ஞானபீட விருது பெற்றவர்களில் கிரிஷ் கர்னாட் ஒருவர். 81 வயதான கிரிஷ் கர்னாட், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் இன்று காலமானார். இது கர்நாடக எழுத்துலக மற்றும் திரையுலகம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த எழுத்துலகத்திற்கும், பேரிழப்பாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், கர்நாடக அரசு வரும் 12ஆம் தேதி வரை, 3 நாட்களுக்கு அரசுமுறை துக்கம் அனுசரிக்க, உள்ளதாகவும், எனவே அரசு நிகழ்ச்சிகள் எதுவுமே நடைபெறாது என்றும் முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
நாளை மறுநாள் புதன்கிழமை, கர்நாடக அமைச்சரவை விஸ்தரிப்பு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதுவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கர்நாடகாவில் இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்திருந்தது.
ஆனால் அரசு அறிவிப்பு வெளியாகும் என்பதற்காகவே முன்பாகவே பள்ளி கல்லூரிகள் தொடங்கி விட்டதால், இந்த உத்தரவை செயல்படுத்த முடியவில்லை. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள், வழக்கம் போல, நாள் முழுக்க கல்வி நிலையங்களில் கல்வி பயின்று விட்டு மாலையில்தான் வீடு திரும்பினர்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications