"தமிழக அரசின் ஒப்புதல் தேவையில்லை.." மேகதாது அணை கட்ட மத்திய அரசிடம் அனுமதி கோரிய கர்நாடக அரசு
பெங்களூர்: மேகதாதுவில் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இதற்குத் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதைத் தாண்டி கர்நாடக அரசு தொடர்ந்து இதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறது. இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பித்துள்ளது. அதில் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கத் தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே மேகதாது விவகாரத்தில் நீண்ட காலமாக மோதல் இருந்து வருவது அனைவருக்கும் தெரியும். மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயல்கிறது.

ஆனால், மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு நியாயமாகக் கிடைக்கும் நீர் தடைப்படும் என்பதால் தமிழக அரசு இதைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
கர்நாடக அரசு: இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தர மத்திய அரசிடம் இப்போது கர்நாடக அரசு விண்ணப்பித்துள்ளது. கர்நாடக அரசு ஏற்கனவே சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசின் மதிப்பீட்டுக் குழுவிடம் கடந்த மே 20ம் தேதி கோரியிருந்தது.
தமிழக அரசின் ஒப்புதல் தேவையில்லை: கூடுதல் தகவல்களை மத்திய அரசு கோரியிருந்த நிலையில், கடந்த ஜூலை 9ம் தேதி கர்நாடக நீர்வளத்துறைப் பதிலளித்து கடிதம் எழுதியிருந்தது. அது தொடர்பான தகவல்கள் தான் இப்போது வெளியாகியுள்ளது. விண்ணப்பத்தைப் பரிசீலிக்கத் தமிழ்நாடு அரசின் ஒப்புதல் தேவையில்லை என்றும் கர்நாடக அரசு தனது விண்ணப்பத்தில் கூறியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் தயாரிப்பதற்கான ஆய்வு எல்லைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த விண்ணப்பம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவால் பரிசீலிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக அரசின் இந்த செயல் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications