கர்நாடகாவில்... இனி 24/7 நேரமும் கடைகள், ஷாப்பிங் மால்கள் இயங்கலாம்... மாநில அரசு அனுமதி!
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் ஆண்டின் அனைத்து நாட்களிலும் தினமும் 24 மணி நேரம் செயல்பட மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
தினமும் எட்டு மணி நேரத்திற்கு மேலேயும், வாரத்தில் நாற்பத்தெட்டு மணி நேரத்திற்கும் மேலாகவும் ஊழியர்களை பணிபுரிய உத்தரவிட கூடாது என வணிக நிறுவனங்களுக்கு அரசு கூறியுள்ளது.
மாநிலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதையும்,பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.

24 மணி நேரம் கடைகள்
இது தொடர்பாக கர்நாடகா மாநில அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகா மாநிலத்தில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் பணிபுரியும் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் ஆண்டின் அனைத்து நாட்களிலும் தினமும் 24 மணி நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மாநிலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதையும்,பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

8 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிய கூடாது
அனைத்து கடை, ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களும் தினமும் எட்டு மணி நேரத்திற்கு மேலேயும், வாரத்தில் நாற்பத்தெட்டு மணி நேரத்திற்கும் மேலாகவும் ஊழியர்களை பணிபுரிய உத்தரவிட கூடாது. கூடுதல் வேலை நேரமும் பத்து மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு ஊழியர் எட்டு மணி நேரத்திற்கு மேல் பணிபுரிந்தால் அவருக்கு கூடுதல் பண பலன்களை வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தது வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும்.

இரவு பணியில் பெண் ஊழியர்?
ஒரு பெண் ஊழியரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற்றபின் கடை அல்லது வணிக நிறுவனத்தின் உரிமையாளர் அந்த பெண் ஊழியருக்கு தகுந்த பாதுகாப்பை வழங்குவதை உறுதி செய்து பெண் ஊழியரை இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை பணிபுரிய அனுமதிக்கலாம்.

நடவடிக்கை எடுக்கபப்டும்
ஷிப்ட் நேரம் தொடர்பாக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை உரிமையாளர்கள் அல்லது மேலாளர்கள் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதன் உத்தரவுகளை மீறுவது நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் என்று அரசாங்கம் கூறியது. இந்த புதிய முறை அடுத்த 3ஆண்டுகளுக்கு பொருந்தும் என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
-
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
கொட்டும் மழைக்கு நடுவே.. பெங்களூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்.. குவிந்த தமிழ் இளைஞர்கள்! -
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications