கர்நாடகத்தில்.. மேலும் 11 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 523 பேராக உயர்வு.. இதுவரை பலி 20
பெங்களூர்: கர்நாடகாவில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 523 பேராக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 207 ஆனது. இந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 20 பேர் பலியாகிவிட்டனர்.

கொரோனா வைரஸ் பரவாத மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்த மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி சிக்மங்களூர், ராய்ச்சூர், சித்ரா துர்கா, ஷிமோகா, கோளார், உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாதராயனபுரா, ஹொங்கச்சந்திரா ஆகிய பகுதிகளில் ரேண்டமாக பெறப்பட்ட ரத்த மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் அனைவருக்கும் கொரோனா இல்லை என முடிவுகள் வந்தன. இதுகுறித்து கோவிட் 19 செய்தித் தொடர்பாளர் சுரேஷ் குமார் கூறுகையில் ப்ரூஹட் பெங்களூரு மஹன்நகரா பகுதிகள் சீலிடப்பட்டுவிட்டது.
எனினும் இந்த பகுதிகளில் உள்ளவர்கள் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றிக் கொண்டிருப்பதாக தினமும் புகார்கள் வந்தன. பாதராயனபுராவில் திங்கள்கிழமை இன்ப்ளூயன்சா பாதித்த நோயாளிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே ஹொங்கச்சந்திராவில் 145 பேருக்கும், பாதராயனபுராவில் 70 பேருக்கும் ரேண்டமாக கொரோனா சோதனை செய்தோம். அதில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கர்நாடகாவில் 4,827 பேருக்கு சோதனை எடுக்கப்பட்டது. அதில் 4,717 பேருக்கு கொரோனா இல்லை என வந்துள்ளது. ஆனால் 11 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மற்றவர்களின் சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்றார்.
-
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications