அடுத்த பிரதமர் யார்? 3 பெரிய தலைவர்களுக்கு பெரும் ஆபத்து? கர்நாடகா மடாதிபதி பகீர்! பரபர கணிப்பு
பெங்களூர்: 2024ம் ஆண்டு உகாதிக்குள் நாட்டில் 3 பெரிய தலைவர்களுக்கு பெரிய ஆபத்து உள்ளது என கர்நாடகாவை சேர்ந்த மடாதிபதியான ஸ்ரீசிவனந்தா சிவயோகி ராஜேந்திர மகாசுவாமி கணித்து கூறி எச்சரித்து இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது. மேலும் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் அரசிகெரே அருகே உள்ள ஹாரனஹள்ளி கிராமத்தில் கோடிமடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக ஸ்ரீசிவானந்த் சிவயோகி ராஜேந்திரா மகாசுவாமி உள்ளார். இவர் அடிக்கடி எதிர்க்காலம் குறித்து பல்வேறு கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அரசியல் மாற்றம், அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்காலம், மழைப்பொழிவு உள்பட பல்வேறு விஷயங்களை அவர் கணித்து தெரிவித்து வருகிறார். இவரது கணிப்புகள் பல நேரங்களில் விவாதத்தை கிளப்பும் வகையில் இருக்கும்.
அந்த வகையில் தற்போது அவர் புதிய கணிப்பை வெளியிட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. இதுதொடர்பாக மடாதிபதியாக ஸ்ரீசிவானந்த் சிவயோகி ராஜேந்திரா மகாசுவாமி கூறியதாவது: நாட்டு மக்களுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பெரிய பெரிய நகரங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். உயரமான கட்டடங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இமயமலை அருகே உள்ள ஜோஷிமத் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.
மேலும் 2024-ம் ஆண்டுக்குள் நாட்டில் பேராபத்து ஏற்படலாம். இதனால் மக்கள் ஆடம்பர வாழ்க்கையை தவிர்த்து ஆன்மிக சிந்தனையுடன் இருக்க வேண்டும். இதுதவிர 2024 உகாதி பண்டிகைக்கு முன்பு நாட்டில் உள்ள பெரிய பெரிய தலைவர்களுக்கு பிரச்சனை ஏற்படலாம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 3 பெரிய மனிதர்கள் ஆபத்தில் உள்ளனர். இதனால் ஆட்சியாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். கவனமாக இருந்தால் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம். ஆபத்தில் உள்ளவர்கள் யார்? என்பதை நேரம் வரும்போது விரிவாக சொல்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அடுத்த பிரதமராக யார் வருவார்கள்? என பத்திரிகையாளர்கள் கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர், ‛‛இந்த கேள்விக்கு பதில் அளிப்பது சாதாரணமானது அல்ல. யார் அடுத்த பிரதமர் என்பதை இப்போதே சொல்லி விட முடியாது. அதுபற்றி இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பது சாதாரண விடயமல்ல என்றார். அதை மட்டும் சொல்லிவிட முடியாது. அதுபற்றி ஆன்மிக சிந்தனையுடன் தியானம் செய்து தனியாக கணிக்க வேண்டும். அப்போது தான் அதுபற்றி தெரிவிக்க முடியும்'' என்றார்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் இவர் கணிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அப்போது கர்நாடகாவில் வெள்ள அபாயம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். விஜயதசமி முதல் பொங்கல் பண்டிகைக்குள் இது நடக்காலம் என தெரிவித்து இருந்தார். தற்போது கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளத்துக்கான அறிகுறியும் உள்ளது. மேலும் பல நாடுகள் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம் என இதற்கு முன்பு கூறியிருந்தார். அதன்படி உக்ரைன், இலங்கை, பாகிஸ்தான் உள்பட பல ஆப்பிரிக்க நாடுகள் பொருளாதார சிக்கலில் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது அவரது கணிப்பு பேசும் பொருளாகி உள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications