குட் நியூஸ்.. ஒருவழியாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆரம்பித்தது கன மழை.. ரெட் அலர்ட்!
Recommended Video
பெங்களூர்: ஜூலை 18 முதல் இன்று வரை கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ரெட் வார்னிங் கொடுத்துள்ளது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
கடந்த ஆண்டு, ஜூலை 14 ஆம் தேதி ஆரம்பத்தில் கேஆர்எஸ் மதகுகள் திறக்கப்பட்டன, அணை அதன் முழு நீர்த்தேக்க அளவான 124.8 அடியை எட்டியதால் கிட்டத்தட்ட 20,000 கன அடி என்ற அளவில், தண்ணீர் வெளியேற்றம் இருந்தது. ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. கடந்த சனிக்கிழமை கேஆர்எஸ் அணையின் நீர் மட்டம் 90.03 அடியாகதான் இருந்தது.

கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் வெளியிட்ட மழைப்பொழிவு அளவுப்படி, ஜூன் 1 முதல் 20 வரை குடகு மாவட்டத்தில் 640 மிமீ மழை பெய்ததாகவும் இது இயல்பை விட 48% குறைவாக இருப்பதும் தெரியவந்தது.
அந்த மாவட்டத்தின் மூன்று தாலுகாக்களில் மழைப்பொழிவு அளவு இயல்பான அளவை ஒப்பிடும்போது குறைந்துள்ளது தெரிகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தலைக்காவிரி அமைந்துள்ள, பாகமண்டலாவில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றின் நீர் வரத்து ஓரளவு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடகு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் சூப்பர் மழையால், காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த கன மழை தொடர்ந்து அதிகரித்தால், இந்த வருடம் காவிரி பங்கீட்டில் கர்நாடகா-தமிழகம் நடுவே மோதல் போக்கு உருவாகாது. விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் தலக்காவேரி பகுதியில், 149.2 மிமீ மழை பெய்துள்ளது. கேரளாவில் வயநாடு பகுதியில் 92 மிமீ மழை பெய்துள்ளது. இதெல்லாம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளாகும்.
தற்போதைய நிலையில், கே.ஆர்.எஸ். அணையிலிருந்து வினாடிக்கு 4,900 கன அடி நீரும், கபினியிலிருந்து 3,500 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்து சேர்ந்துள்ளது.
-
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications