Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 நாளில் 40,000 பேர் பாதிப்பு! கர்நாடகாவை அலறவிடும் கண்அலற்சி நோய்! அது என்ன பிங்க் ஐ பாதிப்பு?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் உள்பட கர்நாடகாவில் பிங்க் ஐ(Pink Eye) எனும் கண்பாதிப்பு நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா உள்பட பல நாடுகளில் அவ்வப்போது புதிய வகை நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்தியாவை பொறுத்தமட்டில் புதிய வகை நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

Karnataka sees above 40,000 pink eye cases in just 10 days, what is this? details here

இத்தகைய சூழலில் தான் தற்போது கர்நாடகாவில் Pink Eye எனும் கண்பாதிப்பு நோய் வேகமாக பரவி வருகிறது. பெங்களூர் உள்பட கர்நாடகாவின் பல மாவட்டங்களில் இந்த நோயால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது கடந்த மாதம் 25ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி 10 நாளில் மட்டும் 40,477 பேர் பிங்க் ஐ எனும் கண்பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக பீதர் மாவட்டத்தில் 7,693 பேர், ராய்ச்சூரில் 6,493 பேர், சிவமொக்காவில் 3,411 பேர், விஜயநகரில் 2,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூர் நகரை பொறுத்தமட்டில் 145 பேரும் பெங்களூர் புறநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் 192 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் வெளியிடப்பட்ட டேட்டாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் பெங்களூர், பெங்களூர் மாவட்டங்களை ஒப்பிடும்போது பிற மாவட்டங்களில் பிங்க் ஐ பாதிப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் பெங்களூரில் பாதிப்பை தடுப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்த பாதிப்பை அடினோ வைரஸ்கள் ஏற்படுத்தும். ஆனால் தற்போது அடினோ வைரஸ் தவிர என்டீரோ வைரஸாலும் இந்த பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. பிங்க் ஐ எனும் கண்பாதிப்புக்கு சில அறிகுறிகள் உள்ளன. அதாவது தொடர்ந்து ஒன்று அல்லது 2 கண்களிலும் வலி ஏற்படுதல், கண்கள் சிவந்து இருத்தல், கண்களில் அரிப்பு ஏற்படுதல், கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறுதல் உள்ளிட்டவை இதற்கான அறிகுறியாக உள்ளது.

இந்த அறிகுறிகள் இருப்பின் உடனடியாக கண்ணாடி அணிவதை நிறுத்த வேண்டும். இது 12 முதல் 24 மணிநேரத்தில் மாறிவிட்டால் பரவாயில்லை. மாறாக தொடர்ந்து நீடித்தால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவமனை சென்று டாக்டர்களை சந்தித்து சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகும். மேலும் அழுக்கான கைகளை கொண்டு கண்களை தொடுவது, அழுக்கு துணியை கண்கள் துடைக்க பயன்படுத்துவது, பிங்க் ஐ பாதித்தவரின் கண்ணாடி, துணியை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை முற்றிலுமாக கைவிட வேண்டும்.

பொதுவாக கண் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் கோடையில் பரவும். ஆனால் பிங்க்- ஐ என்பது மழைக்காலத்தில் பரவுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்பது வளிமண்டலம், வெப்பநிலை, மழையில் ஏற்பட்ட மாற்றங்கள் என கூறப்படுகிறது. இதுபற்றி பெங்களூர் மிண்டோ மருத்துவமனையின் இயக்குனர் சுஜாதா ராதோடு கூறுகையில், ‛‛பொதுவாக கோடைக்காலத்தில் மெட்ராஸ் ஐ மற்றும் ரெட் ஐ பாதிப்புகள் இருக்கும். இதேபோல், குழந்தைகள் அடிக்கடி நீச்சல் குளங்களுக்குச் செல்வதால், கோடைக்காலத்தில் ப்ளீச் தொடர்பான ஆன்ஜுன்க்டிவிட்ஸ் பாதிப்பு பொதுவானது. மேலும் மாம்பழ சீசனில் சின்ன ஈக்கள் மூலம் வெண்படல அழற்சியும் கண்களில் ஏற்படும்.

ஆனால் பருவமழை மாதங்களில் தொற்று விகிதம் அதிகரிப்பது இதுவரை இல்லாத ஒன்றாகும். பெங்களூர் நகரில் தொடர்ந்து பிங்க் ஐ எனும் கண் பாதிப்பு நோய் அதிகரித்து வருகிறது. அலட்சியம் காட்டினால் இது தொற்று நோய் பரவல் போன்ற நிலையை ஏற்படுத்தும். கடந்த 2 வாரங்களில் 400 பேருக்கு பிங்க் ஐ கண் பாதிப்புக்கு சிகிச்சை அளித்துள்ளோம். தினமும் 30 பேருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+