பெங்களூருவில் இன்று தென்னிந்திய அளவிலான காவல்துறை டிஜிபி மாநாடு.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயம்
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இன்று தென்னிந்திய அளவிலான காவல்துறை டிஜிபி மாநாடு நடைபெறுகிறது.
தென்னிந்திய டிஜிபிக்கள் மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் டிஜிபிக்களும், புதுச்சேரி, அந்தமான் & நிக்கோபார், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசத்தின் காவல்துறை தலைமை அதிகாரிகளும் இன்று நடைபெறும் டிஜிபி மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.

பெங்களூருவில் கர்நாடகா மாநில காவல்துறை தென்னிந்திய டிஜிபிக்களின் ஒரு நாள் மாநாட்டை இன்று நடத்துகிறது. இதில் இந்த மாநாட்டை கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடங்கி வைக்கிறார்.

தென்னிந்திய காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாடு கர்நாடகா மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா முன்னிலையில் நடக்கிறது. தென்னிந்திய டிஜிபிக்கள் மாநாட்டில் மத்திய படை உயர் காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.
மாநிலங்களுக்கு இடையே காவல்துறை ஒத்துழைப்பு, குற்ற சம்பவங்கள் எப்படி நடைபெறுகின்றன என்பது தொடர்பான சிக்கல்கள், குற்ற சம்பவங்களால் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள் போன்றவை குறித்து இன்றைய மாநாட்டில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications