மேகதாது.. மத்திய அரசின் அனுமதியை வாங்கி விட்டு.. தமிழகத்தை பேச்சுக்கு அழைக்கும் கர்நாடகா!
பெங்களூர்: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
காவிரிக்கு குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்காக, முதற்கட்ட ஆய்வு பணிகளை மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்குதான் பலன் கிடைக்கும். தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ள முடியும். நீர் தட்டுப்பாடு ஏற்படும்போது இந்த தண்ணீரை தமிழகம் பகிர்ந்துகொள்ள முடியும்.

மேகதாது அணையில் இருந்து கர்நாடக அரசு விவசாயத்திற்காக தண்ணீர் எடுக்கப்போவது கிடையாது. எனவே எதற்காக தமிழகம் இந்த திட்டத்தை எதிர்க்கிறது என்று தெரியவில்லை. நாங்கள் இது தொடர்பாக தமிழகத்துடன், சண்டை போடுவதற்கு விரும்பவில்லை. பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக உள்ளோம்.
இது தொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த நேரம் கேட்டுள்ளோம். எப்போது அழைத்தாலும் தமிழகம் சென்று பேச தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications