Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணுவ வீரர் கொலை வழக்கு.. எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை.. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை பாயும்!

ராணுவ வீரர் கொலையில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று காவல்துறை கூறியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலை சம்பவத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தெரிவித்துள்ளார். இதில் தாக்கப்பட்டவர்கள், தாக்கியவர்கள் அனைவருமே உறவினர்கள் என்று கூறிய அவர், அரசியல் கண்ணோட்டத்துடன் சமூக வலைதளங்களில் பரப்புரை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அருகே எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன் மற்றும் அவரது சகோதரர் பிரபு. இவர்கள் இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

கடந்த 8ம் தேதி பிரபு தனது வீட்டின் அருகே உள்ள குடிநீர் தொட்டியின் அருகில் துணிகளை துவைத்துள்ளார். அப்போது அங்கு வந்த நாகரசம்பட்டி பேரூராட்சி வார்டு உறுப்பினர் சின்னசாமி, பிரபுவிடம், இது என்ன துணிகள் துவைக்கு இடமா என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

ராணுவ வீரர் கொலை

ராணுவ வீரர் கொலை

இதன் காரணாமாக பிரபு - சின்னசாமி இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போதூ பிரபுவின் அம்மா கண்ணம்மாளும் அங்கு வர, வாக்குவாதம் முற்றியுள்ளது. இந்த நிலையில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் சின்னசாமி தனது மகன்கள் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டியன் மற்றும் மேலும் சிலருடன் பிரபாகரன் மற்றும் அவரது சகோதரர் பிரபு மற்றும் அவர்களது நாய் கண்ணம்மாள், தந்தை மீது பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

9 பேர் கைது

9 பேர் கைது

இதில் படுகாயமடைந்த நான்கு பேரும் ஒசூர் தனியார் மருத்துவமானையில் சிகிச்சை பெற்று வந்தானர். இந்த நிலையில் கடந்த 14ம் தேதி மாலை சிகிச்சை பலனின்று ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திமுக வார்டு உறுப்பினர் சின்னசாமி உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர்.

காவல் கண்காணிப்பாளர் விளக்கம்

காவல் கண்காணிப்பாளர் விளக்கம்

இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட காட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ராணுவ வீரரை திமுகவினர் திட்டமிட்டு கொலை செய்ததாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் செய்தியாளார்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். அதில், ராணுவ வீரர் கொலை சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இதில் தாக்குதல் நடத்தியவர்கள், காயம் அடைந்தவர்கள், உயிரிழந்த ராணுவ வீரர் அனைவரும் நெருங்கிய உறவினர்கள் தான். சாதாரணமாக தொடங்கிய சண்மை, கைகலாப்பாக மாறி கொலை வரை சென்றுள்ளது. இதனை சில அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் திட்டமிட்ட கொலை என்று அரசியல் கண்ணோட்டத்தோடு சமூக வலைதளங்களில் பரப்புரை செய்து வருகின்றானர். அப்படி பாரப்புரை செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+