ஆட்சியை தக்க வைக்க "போராட்டம்".. எல்லாத்துக்கும் மன உடையும் குமாரசாமியின் மனதளராத முயற்சி!
Recommended Video
பெங்களூர்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக சட்டசபையில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை குமாரசாமி அரசு கொண்டு வந்தது.
ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு கொறடாவுக்கு பொருந்தாது என காங்கிரஸ் தரப்பு தெரிவித்தது. மேலும் சட்டசபை விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட கூடாது என்று இருக்கும் நிலையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து நீதிமன்றமே விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என காங்கிரஸ் தரப்பு தெரிவித்தது.

ஒத்திவைப்பு
இதையடுத்து மாநில ஆளுநரிடம் பாஜக முறையிட்டது. அப்போது உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு உத்தரவிடப்பட்டது. ஆனால் இரு நாட்களாகியும் நடத்தப்படவில்லை. இதையடுத்து சட்டசபை திங்கள்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

மனுதாக்கல்
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடுமாறு 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
ஆனால் நீதிபதியோ, கர்நாடகா- உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாது என கூறி கோரிக்கையை நிராகரித்துவிட்டார். இந்த நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் நாளை ஆஜராக சம்மன் அனுப்பிய சபாநாயகர் ரமேஷ்குமார், இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

கோரிக்கை
இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தை நடத்த வேண்டியுள்ளதால் கால அவகாசம் தேவை என குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளதால் புதன்கிழமை வரை நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்தி வைக்க வேண்டும் என கோரியுள்ளார்.

கணக்கு
இன்னும் இரு தினங்களுக்குள் எப்படியும் அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்துவிடலாம் என குமாரசாமி கணக்கு போட்டுள்ளார். ஆனால் இது எந்தளவுக்கு கைகூடும் என்பது போக போகத் தான் தெரியும்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications