இது என்னனு பாருங்க.. அது பாட்டுக்கு போகுது.. மெடிக்கல் காலேஜுக்குள் வந்த சத்தம்.. அலறிய மக்கள்
பந்திப்பூர் மருத்துவ கல்லூரியில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தது
பெங்களூரு: ஒரு சிசிடிவி வெளியாகி உள்ளது.. மெடிக்கல் காலேஜுக்குள் இருந்து வந்த சத்தமும், அங்கு ஓடிய அந்த உருவமும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது... இந்த காப்பகத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

வனவிலங்குகள் கணக்கெடுப்பில் இது தெரிய வந்திருக்கிறது. முன்பெல்லாம் இந்த எண்ணிக்கை குறைந்து வருவதாக கவலைப்பட்டு வந்த நிலையில், இந்த தகவலை வனத்துறை தெரிவித்திருந்தது. இந்த பந்திப்பூர் காட்டு பகுதியையொட்டி, எடபெட்டா மலைப்பகுதி உள்ளது.. இங்கு சாம்ராஜ்நகர் மெடிக்கல் காலேஜ் அமைந்துள்ளது.

இந்த காலேஜில்தான் கடந்த புதன்கிழமை நடுராத்திரி அந்த பயங்கர சத்தம் கேட்டது.. இதனால், அந்த காலேஜின் பேராசிரியர்கள், காலேஜுகுள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர்.. அப்போதுதான் அந்த சிறுத்தை ஓடியது.. அவ்வளவு பெரிய ஹாலில், ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில், விளக்குகள் பளிச்சென எரிய, அந்த சிறுத்தை நடக்கிறது, ஓடுகிறது, இங்கும் அங்கும் உலாவுகிறது.
இந்த வீடியோ சோஷியல் மீடியாவிலும் வெளியாகி பரபரப்பை தந்தது. சிறுத்தையின் நடமாட்டம் குறித்து உடனடியாக வனத்துறைக்கு புகாரும் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் காலேஜுக்கு வந்து, அந்த சிறுத்தையை தேடி பார்த்தனர்.. ஆனால், அது அங்கு இல்லை.. அந்த காலேஜுக்கு இன்னொரு வழி இருக்கிறது போலும்.. அதனால் அந்த பக்கமாக வெளியேறி சென்றுவிட்டது தெரியவந்தது.
இருந்தாலும், கர்நாடகா வனத்துறையினர் சிறுத்தை சென்ற இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். சாம்ராஜ் நகர் காலேஜில் சிறுத்தை நுழைந்த சம்பவம் மருத்துவ மாணவர்கள் மற்றும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications