"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.." வைரலாகும் ஒற்றை புகைப்படம்!
பெங்களூர்: ஆன்லைன் மூலம் படிக்கும் தனது மகள் நனையாமல் இருக்க அவரது தந்தை குடைப்பிடித்தபடி இருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையிலிருந்து இந்த ஆண்டு 2ஆவது அலை வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆன்லைன் வகுப்பில் படிக்க பலருக்கு போன் இல்லை, இணையம் சிக்னல் கிடைப்பதில் பிரச்சினை. இத்தனையையும் கடந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் படித்து வருகிறார்கள்.

தட்சிண கன்னட மாவட்டம்
அந்த வகையில் கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, தனது வீட்டில் ஆன்லைன் வகுப்பை கவனிக்க நெட் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் தினந்தோறும் சாலையில் அமர்ந்து படித்து வருகிறார். இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பின் போது மழை கொட்டியது.

மழையில் நனைதல்
தனது மகள் மழையில் நனைவதை கண்ட அவரது தந்தை ஓடி வந்து குடை பிடித்தார். இந்த ஒற்றை புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தனது மகளின் படிப்பு கெடாத வண்ணம் மழையில் நனையாத வகையில் குடைபிடித்தபடி நீண்ட நேரம் நின்றிருந்த தந்தையை பாராட்டி வருகிறார்கள்.

ஆன்லைன் வகுப்பு
தொலைதூர கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் படிக்க எத்தனை கஷ்டங்களை சந்திக்கிறார்கள் என்பதை அறிய இந்த ஒற்றை புகைப்படமே சான்றாகும். அந்த மாவட்டத்தில் சுல்லியா தாலுக்காவில் பலாக்கா கிராமத்தில் இணையதளம் சிக்னல் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.

பிஎஸ்என்எல் நெட்
இணையதள சிக்னல் கிடைப்பதற்காக கிராமத்தினர் சிக்னல் கிடைக்கும் இடங்களுக்கு செல்வதாக தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து அந்த மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் கூறுகையில், பலாக்கா கிராமத்தில் பிஎஸ்என்எல் நெட் சிக்னல் எடுப்பதில்லை.

தென்மேற்கு பருவமழை
இதனால் ஆன்லைன் வகுப்புகளுக்காக 30 முதல் 40 மாணவர்கள் வரை சிக்னல் கிடைக்கும் இடத்தில் குழுமி வகுப்புகளை கவனித்து வருகிறார்கள். தென்மேற்கு பருவமழையின் போதும் காலை 9 மணிக்கு வருவோம், 1 மணி வரை பாடம் கவனித்துவிட்டு பின்னர் 2 மணிக்கு மதிய உணவுக்கு சென்றுவிட்டு மீண்டும் வருவோம் என்றனர்.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
டிகே சிவக்குமாருக்கு புதிய சிக்கல்.. பெங்களூர் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து போர்க்கொடி.. பரபரப்பு -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications