கண்டுகொள்ளப்படாத மயில்சாமி அண்ணாதுரை! விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின்போது நடந்தது என்ன?
Recommended Video
பெங்களூர்: சந்திரயான் 2 திட்டத்தின், விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை காண்பதற்கு, இஸ்ரோ சார்பில், ஓய்வுபெற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சந்திரயான்-1 நிலவில் வெற்றிகரமாக ஆய்வு செய்தது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. அந்த மாபெரும் திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர் மயில்சாமி அண்ணாதுரை. சந்திரயான்-2 திட்டத்தின் ஆரம்ப காலத்திலும் அதன் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர் மயில்சாமி அண்ணாதுரை.

2018ஆம் ஆண்டு இஸ்ரோவில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவராக பணிபுரிந்து வருகிறார். தனது சேவைக்காக பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 7ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரை இறங்குவதாக இருந்தது. அந்த நிகழ்வை காண்பதற்கு பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர்.
அதேநேரம் மயில்சாமி அண்ணாதுரை அங்கு இல்லை என்பதை பத்திரிக்கையாளர்கள் கவனிக்கத் தவறவில்லை.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்று, மயில்சாமி அண்ணாதுரையிடமே கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அவர், உண்மைதான். எனக்கு இந்த நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை, என்று சொல்லியதோடு நிறுத்திக் கொண்டார். அதற்குமேல் பேச அவர் விரும்பவில்லை.
இது குறித்து ஓய்வுபெற்ற இஸ்ரோ அதிகாரி ஒருவர், செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "மயில்சாமி அண்ணாதுரை தனது பணி காலத்தில் பெரும்பான்மையான பகுதிகளை செயற்கைக்கோள் பிரிவில் செலவிட்டுள்ளார்.
சந்திரயான்-1 திட்ட இயக்குனராக பணியாற்றி நாட்டுக்கு புகழை தேடித் தந்தார். இதுபோன்ற அறிவு மிக்கவர்களை பயன்படுத்திக் கொள்வது அவசியம். ஏனெனில் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில், விண்வெளி விஞ்ஞானிகள் மிகவும் குறைவாகவே உள்ளார்கள் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications