பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.. இடப்பங்கீடு பேச்சுவார்த்தை?
பெங்களூர்: லோக்சபா தேர்தல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பெங்களூரில் இன்றும் நாளையும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை செய்கின்றன.
லோக்சபா தேர்தல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பெங்களூரில் இன்றும் நாளையும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை செய்கின்றன.
மொத்தம் 24 கட்சிகளின் தலைவர்கள் இன்று பெங்களூரில் சந்திக்க உள்ளனர். தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.

கடந்த கூட்டத்தில் 14 கட்சிகள் பீகாரில் உள்ள பாட்னாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை கூடுதல் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றன. காங்கிரஸ் கட்சி சார்பாக இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்றுள்ளன. கடந்த முறை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முழுக்க முழுக்க கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்த நிலையில் இந்த முறை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளார்.
அதேபோல் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னதாக ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். லோக்சபா தேர்தலில் என்ன செய்வது? பாஜகவை எப்படி எதிர்கொள்வது, கூட்டணி அமைப்பதா, இடங்களை பகிர்ந்து கொள்வதா? பொது வேட்பாளர்களை அறிவிப்பதா என்பது உள்ளிட்ட விஷயங்களை ஆலோசனை செய்ய உள்ளனர்.
இந்த கூட்டத்தில் முன்னதாக ஆம் ஆத்மி கட்சி பங்கேற்பதில் குழப்பம் நிலவியது. டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில அரசுக்கு பதிலாக மத்திய அரசு மாற்றும் அதிகாரத்தை வழங்கும் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சிக்கு கோரிக்கை விடுத்தது. கடந்த மீட்டிங்கிலேயே இருவருக்கும் இடையில் இதனால் மோதல் ஏற்பட்டது.
இதில் காங்கிரஸ் முடிவு எடுத்தால்தான் எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்றும் ஆம் ஆத்மி கூறியது. இந்த நிலையில்தான் இந்த மசோதா விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக செயல்பட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்க்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதையடுத்து தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்தார்.
கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இது தவிர, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே மற்றும் எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் இந்த மிக முக்கியமான கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கடந்த கூட்டத்தில் திமுக கட்சி முக்கியமான 7 ஐடியாக்களை கொடுத்தது. அதன்படி 1) ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக உள்ள ஒரு கட்சியின் தலைமையில் மாநில வாரியாக கூட்டணி அமைக்கலாம். 2) அது சாத்தியமில்லை என்றால், நேரடிக் கூட்டணி இல்லாமலேயே சீட்-பகிர்வு ஏற்பாடு செய்யலாம்.
3) இரண்டும் சாத்தியமில்லை என்றால், ஒரு பொது வேட்பாளரை அறிவிக்கலாம். 4) தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சரியான முடிவாக இருக்காது. 5) அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே பொதுவான குறைந்தபட்ச தேர்தல் பிளான் வகுக்கப்பட வேண்டும். 6) கட்சிகளுக்கு இடையே எழக்கூடிய ஏதேனும் பிரச்சனைகளை தீர்க்க, ஒரு நடவடிக்கை குழு அமைக்கப்படும்.
7) பிரதமர் வேட்பாளர் குறித்து இப்போது முடிவு எடுக்க வேண்டியது இல்லை, என்பது உள்ளிட்ட ஐடியாக்களை திமுக கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தேர்தல் இடப்பங்கீடு குறித்து ஆலோசனை நடைபெறலாம் எனத் தெரிகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பெயர் வைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications