கொரோனா.. தத்தளிக்கும் பெங்களூர்.. பாசிட்டிவ் விகிதம் 55% ஆக அதிகரிப்பு.. முழு ஊரடங்கு வருகிறது
பெங்களூர்: கொரோனா பாதிப்பு காரணமாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் தத்தளித்து வருகிறது அங்கு பரிசோதனை செய்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
அதாவது 55 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் மே 12ம் தேதி முதல் முழு லாக்டவுனை கர்நாடகா முழுக்க பிறப்பிக்க திட்டமிட்டுள்ளதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இப்போது காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அறிகுறி நபர்கள்
அறிகுறி இருக்கும் நபர்களை மட்டுமே சோதிக்கும் அரசின் முடிவு, கொரோனா விகிதங்கள் பெங்களூரில் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மோசமான நிலை
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை 40,128 கோவிட் சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், 22,112 பாசிட்டிவாக வந்துள்ளது. மே முதல் மூன்று நாட்களில் சராசரி தினசரி பாசிட்டிவ் விகிதம் 45% என்ற அளவுக்கு இருந்தது. அது தற்போது அதிகரித்துள்ளது.

அதிகரித்த பாதிப்பு
கடந்த வார நிலவரப்படி, பெங்களூரில் பாசிட்டிவ் ரேட் 12 சதவீதமாக இருந்தது. அப்போது, 20,82,897 சோதனைகள் நடத்தப்பட்டன, மார்ச் மாதம் 13,78,753 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பாசிட்டிவ் ரேட் 2.31 சதவீதமாக இருந்தது. கடந்த வருடம் ஜூலை மாதத்தில் பாசிட்டிவ் ரேட் மிக அதிகமாக 23.8 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது அதையும் தாண்டி மோசமான நிலைக்கு வந்துள்ளது.

படுக்கை பற்றாக்குறை
நகரத்தின் வெவ்வேறு மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் படுக்கைகளைத் தேடி தினமும் குறைந்தது 500 நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஆம்புலன்ஸ்களில் சென்று காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் படுக்கை வசதி இல்லாமல் திருப்பியனுப்பப்படுகிறார்கள். பலரும் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications