சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு.. சவுதியில் கைதான இந்தியர்.. விடுதலைக்காக உதவும் இஸ்லாமிய நண்பர்கள்!
சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு சிறை சென்ற இந்தியர் ஹரிஷ் பங்கேராவை விடுவிக்க கர்நாடகாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்க
பெங்களூர்: சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு சிறை சென்ற இந்தியர் ஹரிஷ் பங்கேராவை விடுவிக்க கர்நாடகாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் பங்கேரா. இவர் சவுதி அரேபியாவில் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வருகிறார். அங்கு ஏசி மெக்கானிக் பணியில் இவர் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இவர் இஸ்லாம் மதத்திற்கும் எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் போஸ்ட் செய்ததாக புகார் எழுந்தது. இவரின் சர்ச்சையான பேஸ்புக் பதிவுகள் எல்லாம் இணையம் முழுக்க வைரலானது.

என்ன வைரல்
மிக முக்கியமாக இவர் மெக்காவை இடித்துவிட்டு அங்கு ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று போஸ்ட் செய்தது பெரிய வைரல் ஆனது. அதேபோல் முகமது பின் சல்மான் குறித்து இவர் தகாத வார்த்தைகளில் போஸ்ட் செய்ததும் சர்ச்சை ஆனது. சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிராகவும் சர்ச்சையாக நிறைய போஸ்ட்களை செய்து இருந்தார்.

மிக மோசம்
இதையடுத்து அவருக்கு எதிராக சவுதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து முடி இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து தவறுதலாக பேசியதற்காக ஹரிஷ் பங்கேரா கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக புகார் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஹரிஷ் பங்கேரா
இந்த நிலையில் ஹரிஷ் பங்கேராவை விடுவிக்க அவரின் சொந்த ஊரை சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்காக சவுதியில் இருக்கும் தங்கள் உறவினர்கள், தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்கள் மூலம் சட்ட ரீதியாக முயன்று வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் ஹரிஷ் பங்கேரா வெளியே வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

வழக்கு எப்படி
அதேபோல் இவரை விடுவிக்க இந்திய வெளியுறவுத்துறையும் தீவிரமாக முயன்று வருகிறது. ஹரிஷ் பங்கேராவின் மனைவி இதுகுறித்து கூறும் போது, என் கணவரின் பேஸ்புக் கணக்கை யாரோ முடக்கிவிட்டார்கள். அவரை விடுதலை செய்ய வேண்டும். அவரின் விடுதலைக்காக உதவி செய்யும் நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications