என் மருமகள் நடத்தை தான் சரியில்லை! பிரஜ்வல், ரேவண்ணா மீது செக்ஸ் புகாரளித்த பெண்ணின் மாமியார் தடாலடி
பெங்களூர்: கர்நாடகாவில் ஆபாச வீடியோ வழக்கு அதிர வைத்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஜேடிஎஸ் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையான ரேவண்ணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் புகார் அளித்த பெண்ணின் மாமியார் கூறியுள்ள கருத்து இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் கட்சியின் நிறுவன தலைவருமான தேவகவுடாவின் மகன் ரேவண்ணா. இவர் ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிப்புரா எம்எல்ஏவாக உள்ளார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஜேடிஎஸ் சார்பில் ஹாசன் எம்பியாக உள்ளார்.

இப்போது லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவும், ஜேடிஎஸ்சும் கூட்டணியாக உள்ளது. அதன்படி பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் ஹாசனில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் சார்பில் களமிறங்கி உள்ளார். கடந்த 26ம் தேதி இந்த தொகுதிக்கு தேர்தல் முடிந்தது.
இதற்கிடையே தான் பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் சேர்ந்து நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் பரவ தொடங்கியது. அவர் 300க்கும் அதிகமான பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. சுமார் 3000க்கும் அதிகமான ஆபாச வீடியோக்களை பென்டிரைவில் வைத்துள்ள நிலையில் அதில் இருந்து பல வீடியோக்கள் கசிந்துள்ளன. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் உள்ள பெண்கள், உதவி கோரி வரும் பெண்கள், அரசு பெண் அதிகாரிகளை குறிவைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகா அரசியலில் இந்த மேட்டர் புயலை கிளப்பி உள்ளது. கர்நாடகா அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணையை தொடங்கிய நிலையில் பிரஜ்வெல் ரேவண்ணா ஜெர்மனி சென்றுவிட்டார். இதற்கிடையே தான் நேற்று பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது அவர்களின் வீட்டில் வேலை செய்த முன்னாள் பெண் ஊழியர் ஹாசன் போலீசில் புகாரளித்தார்.
அந்த புகாரவில் ரேவண்ணாவின் மனைவி பவானி வீட்டில் இல்லாத நேரத்தில் ரேவண்ணா பாலியல் தொல்லை அளித்தார். அதேபோல் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணாவும் தவறாக நடந்து கொண்டார். அதுமட்டுமின்றி எனது மகளுக்கு வீடியோ கால் செய்து தொல்லை அளித்ததோடு மிரட்டினார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த பெண் ரேவண்ணா வீட்டில் வேலை செய்யாத நிலையில் அவரது புகார் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த புகாரின் பேரில் தந்தை ரேவண்ணா, மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354ஏ (பாலியல் தொல்லை), 354 டி (பின்தொடருதல்), 506 (மிரட்டுதல்), 509 (பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ மட்டுமே வெளியான நிலையில் தற்போது அவரது தந்தை ரேவண்ணாவும் வீட்டில் வேலை பார்த்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று ரேவண்ணா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் புகாரளித்த பெண்ணின் மாமியார் கவுரம்மா ஹாசனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எங்களின் கஷ்டம், நஷ்டத்தை பவானி(ரேவண்ணாவின் மனைவி - பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய்) அம்மா தான் பார்த்து கொள்கிறார். ஆனாலும் ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுக்கு முந்தைய சம்பவம் தொடர்பாக இப்போது புகார் அளிப்பது உள்நோக்கமாக உள்ளது. புகார் அளித்த என் மருமகளின் நடத்தை சரியில்லை.
ஏனென்றால் ரேவண்ணா மீது புகார் அளித்துள்ள எனது மருமகள் கடந்த 5 ஆண்டுக்கு முன்பே அவரது வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். ஆனால் இப்போது தான் புகார் அளித்துள்ளார். இதன் பின்னணி நோக்கம் வேறாக இருக்கிறது. தேவகவுடா குடும்பத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எனது மருமகளின் நோக்கமாக உள்ளது. ரேவண்ணா எங்கள் குடும்பத்துக்கு கடவுள் போன்றவர். அவரது மனைவி பவானி எங்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். இப்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான வீடியோவில் உண்மையில்லை'' என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications