ஏதோ ஒரு மாற்றம் இருக்கு.. வாக்காளர்கள் ஆர்வமாக இருக்காங்க.. பிரகாஷ் ராஜ் சொல்றதை பாருங்க
பெங்களூர்: பெங்களூர் மத்திய தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த நடிகர் பிரகாஷ் ராஜ், மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை பார்க்கும் போது ஏதோ ஒரு மாற்றம் இருக்கிறது என்று பேசினார். மேலும், இன்று லைனில் நிற்கவில்லை என்றால் வருடம் முழுக்க நிற்க வேண்டியிருக்கும் என்றும் அவர் பேசினார்.
லோக்சபா தேர்தலுக்கான 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்தியபிரதேசம் என மொத்தம் 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), உத்தரபிரதேசம் (8), மகாராஷ்டிரா (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஸ்கர் (3), மேற்கு வங்கம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.
அந்த வகையில், பெங்களூர் மத்திய தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரகாஷ் ராஜ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதை பார்க்கின்ற போது ஏதோ மாற்றம் வரப்போகிறது என்று கருதுகிறேன் என கூறினார். அவர் கூறியதாவது:-
வாக்களிப்பது ரொம்ப முக்கியமான விஷயம். நீங்க தேர்ந்தெடுக்க போறவர்கள்தான் எதிர்காலத்தை முடிவு செய்ய போகிறவர்கள். நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் தகுதியும் உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும். குறிப்பாக முதல் முறை வாக்காளர்களுக்கு இது அற்புதமான அனுபவம். அது ஒரு அதிகாரம்.. உங்கள் தலைவர், பிரதிநிதியை தேர்வு செய்யுங்கள்.
7 மணிக்கு என்றால் 7 மணிக்கு வரவேண்டும்.. இத்தனை பேர் வந்து இருக்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு மாற்றம் இருக்கு.. அவுங்க ஆர்வத்துடன் வருகிறார்கள் என்றால் அவுங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது அல்லவா... இன்னைக்கு ஒருநாள் லைனில் நிற்க வேண்டியதுதானே.. இல்லையென்றால் வருஷம் முழுவதும் லைனில் நிற்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications