அதிகரித்த டென்ஷன்.. நம்ம நிலம்.. நம்ம உரிமை! காவிரி பிரச்சனையில் நடிகர் சுதீப் பரபர அறிக்கை!
பெங்களூர்: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ‛நம்ம நிலம்.. நம்ம உரிமை' என நடிகர் சுதீப் பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்த தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்றுடன் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் தான் தமிழகத்துக்கான தண்ணீர் திறப்பை உடனே நிறுத்த மண்டியாவில் பந்த் நடந்தது. இன்று பெங்களூரில் பந்த் நடந்து வருகிறது. மேலும் வரும் 29 ம் தேதி கர்நாடகா முழுவதும் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் காவிரி விஷயத்தில் கர்நாடகாவில் நடக்கும் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் கன்னட திரையுலகை பல்வேறு அமைப்பினர் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நடிகர் கிச்சா சுதீப் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கன்னட மக்களுக்கு வணக்கம், காவிரி பிரச்சனை என்பது மீண்டும் உருவாகி உள்ளது. கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகாவின் நிலம், நீர், மொழிக்கான போராட்டத்தில் நான் உங்களுடன் இருக்கிறேன். பருவமழை குறைந்த காரணத்தினால் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய மட்டுமின்றி குடிக்கவும் தண்ணீர் கிடைப்பதில் பிரச்சனை உருவாகி உள்ளது. நமக்கு குடிநீருக்கு வேறு ஆதாரங்கள் இல்லை. காவிரியை மட்டுமே நம்பி இருக்கிறோம்.

மேலும் நிபுணர் குழுஆய்வு மூலம் மாநிலத்தின் நீர்இருப்பை காவிரி தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வை பேச்சுவார்த்தை மூலம் காண வேண்டும். மேலும் வறட்சி நிவாரணங்கள் வழங்க வேண்டும்.
கர்நாடகா நிலைமையை மத்திய அரசிடம் எடுத்துக்கூற அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும். இதை அனைத்தையும் விரைந்து செயல்டுத்த வேண்டும். அதேபோல் பிற பிரச்சனையகளாக கிருஷ்ணா நதிநீர், மகாதாயி மற்றும் கலசா பண்டூரி திட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். நம்ம நிலம் நம்ம உரிமை'' என கூறியுள்ளார்.
-
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!












Click it and Unblock the Notifications