பெங்களூர் ரோட்டில் ராட்சத பள்ளம்.. என்னங்க இவ்வளவு ஆழமாக இருக்கு.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் பெங்களூர் அத்திபள்ளியில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டுள்ளது. பார்க்க பள்ளத்தாக்கு போல் ஆழமாக ஏற்பட்டுள்ள இந்த பள்ளத்தால் பெங்களூர் - ஓசூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் ஓசூர் ரோட்டில் ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு பிரபலமான நிறுவனங்கள் உள்ளன. நாள்தோறும் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கும் இந்த சாலை வழியாக லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர்.

national-highway-road-caves-in-near-attibele-near-bengaluru

இந்நிலையில் தான் பெங்களூர் அத்திப்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் திடீரென்று சாலையில் விழுந்த பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பள்ளம் ஆழமாக உள்ளது. இதனால் பாதுகாப்புக்காக பள்ளத்தை சுற்றி தடுப்புகள் வைத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் பள்ளம் விழுந்த இடத்தில் புதிதாக சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் சாலை திடீரென்று உள்வாங்கி உள்ளது. இதனால் தான் சாலை பூமிக்குள் சரிந்துள்ளது.

இதுபற்றி அத்திப்பள்ளி காவல்துறை கூறுகையில் ‛‛இரவில் நடந்த சம்பவத்தால் அதிர்ஷ்டவசமாக எந்த விபத்துகளும் ஏற்படவில்லை. பள்ளம் ஏற்பட்ட சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க உடனடியாக தடுப்புகள் வைத்துள்ளோம்'' என்றனர்.

தற்போது இந்த சாலையை சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஈடுபட்டு வருகிறது. தற்போது அந்த பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்த அதன் அருகே சர்வீஸ் சாலை திறக்கப்பட்டுள்ளது. வாகன நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+