பயங்கரவாத நெட்வொர்க் வழக்கு.. தென் இந்தியாவில் 19 இடங்களில் என்ஐஏ ரெய்டு! டார்கெட் பெங்களூரா?
பெங்களூர்: பயங்கரவாத அமைப்பு தொடர்பாக தென் இந்தியாவில் மட்டும் 19 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 40 க்கும் அதிகமான இடங்களில் ஐஎஸ் அமைப்புக்கு தொடர்புடையவர்கள் இருப்பதாக கூறி தீவிர சோதனை மேற்கொண்டது. மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டது. பட்கா போரிவாலி, தானே, மிரா சாலை, புனே உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். அதேபோன்று கர்நாடகா தலைநபர் பெங்களூரிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனையில் 15 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் பணம், ஆயுதங்கள், முக்கிய ஆவணங்கள், ஸ்மார்ட்போன்கள், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து என்.ஐ.ஏ வெளியிட்ட அறிக்கையில், 2 ஏர் துப்பாக்கிகள், 9 வாள்/ கத்திகள், 2 லேப்டாப்புகள், 6 ஹாட் டிஸ்குகள், 3 சிடிக்கள், 39 செல்போன்கள், 10 புத்தகங்கள், ரூ.68 லட்சம் ரூபாய் ரொக்கம், ஹமாஸ் இயக்கத்தின் 51 கொடிகள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் இன்று பயங்கரவாத அமைப்புக்கு தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக காலை முதல் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தென் இந்தியாவில் மட்டும் 19 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள சுல்தார் பல்யா, ஜேசி நகர், சின்னப்பா கார்டன், புலகேசி நகர் உள்ளிட்ட 11 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று டெல்லி, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனையிட்டு வருவதாக கூறப்படுகிறது. எந்த அமைப்பை குறிவைத்து என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்படுகிறது? டிசம்பர் 9 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனைக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications