பயங்கரவாத நெட்வொர்க் வழக்கு.. தென் இந்தியாவில் 19 இடங்களில் என்ஐஏ ரெய்டு! டார்கெட் பெங்களூரா?
பெங்களூர்: பயங்கரவாத அமைப்பு தொடர்பாக தென் இந்தியாவில் மட்டும் 19 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 40 க்கும் அதிகமான இடங்களில் ஐஎஸ் அமைப்புக்கு தொடர்புடையவர்கள் இருப்பதாக கூறி தீவிர சோதனை மேற்கொண்டது. மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டது. பட்கா போரிவாலி, தானே, மிரா சாலை, புனே உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். அதேபோன்று கர்நாடகா தலைநபர் பெங்களூரிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனையில் 15 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் பணம், ஆயுதங்கள், முக்கிய ஆவணங்கள், ஸ்மார்ட்போன்கள், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து என்.ஐ.ஏ வெளியிட்ட அறிக்கையில், 2 ஏர் துப்பாக்கிகள், 9 வாள்/ கத்திகள், 2 லேப்டாப்புகள், 6 ஹாட் டிஸ்குகள், 3 சிடிக்கள், 39 செல்போன்கள், 10 புத்தகங்கள், ரூ.68 லட்சம் ரூபாய் ரொக்கம், ஹமாஸ் இயக்கத்தின் 51 கொடிகள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் இன்று பயங்கரவாத அமைப்புக்கு தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக காலை முதல் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தென் இந்தியாவில் மட்டும் 19 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள சுல்தார் பல்யா, ஜேசி நகர், சின்னப்பா கார்டன், புலகேசி நகர் உள்ளிட்ட 11 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று டெல்லி, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனையிட்டு வருவதாக கூறப்படுகிறது. எந்த அமைப்பை குறிவைத்து என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்படுகிறது? டிசம்பர் 9 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனைக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications