Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் சிறையில் பிரபல நடிகை பவித்ரா கௌடா வீட்டு சாப்பாடு இல்லை? சிறை நிர்வாகம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவரது வழக்கில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கவுடா உள்பட சம்பந்தப்பட்டவர்கள் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மீது வழக்கு விசாரணை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில் நடிகை பவித்ரா கவுடா உள்பட 3 பேர் தினமும் ஒரு வேளை வீட்டு சாப்பாடு சாப்பிட நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.இதனை எதிர்த்துசிறை நிர்வாகம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம், பெங்களூர் அருகே உள்ள ஒரு கால்வாயில் 33 வயதாகும் ரேணுகாசாமி என்பவரை பிரபல கன்னட நடிகரான தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கௌடா ஆகியோர், கடத்தி , சித்ரவதை செய்து கொலை செய்ததாக புகார் எழுந்தது.

Bengaluru jail food

பவித்ரா கௌடாவிற்கும் தரிசனுக்கும் இடையே உள்ள உறவு குறித்து, ரேணுகாசாமி சமூக வலைதளங்களில் ஆபாசமான மற்றும் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டு வந்ததால்,ஆத்திரமடைந்த தர்ஷன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், சித்ரதுர்காவிலிருந்து ரேணுகாசாமியைக் கடத்தி வந்து, பெங்களூருவில் உள்ள ஒரு பட்டறையில் வைத்து கொடூரமாகத் தாக்கி கொன்றார்கள் என கூறப்படுகிறது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சிறையில் உள்ள பவித்ரா கவுடா மற்றும் நாகராஜூ, லட்சுமணன் ஆகியோர் தாங்கள் வீட்டு உணவை சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி அவர்களது கோரிக்கையை ஏற்ற பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டு நீதிபதி தினமும் இரவு ஒரு வேளை மட்டும் வீட்டில் சமைத்த உணவை வழங்க கடந்த டிசம்பர் 30ம்தேதி அனுமதித்ததார்

இதனால் சிறை உணவுகளுக்கு பதிலாக வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வரும் உணவுகளையே தினமும் அவர் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. , அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகும், சிறை அதிகாரிகள் இதுவரை வீட்டு உணவுகளை வழங்கவில்லை.

இதற்கிடையில், வித்ரா கவுடாவுக்கு வீட்டு உணவு வழங்க கோர்ட்டு வழங்கியுள்ள அனுமதியை எதிர்த்து, சிறை நிர்வாகம் சார்பில் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருக்கிறதாம். பவித்ரா கவுடாவுக்கு வீட்டு உணவு வழங்கினால், அதன்பிறகு நடிகர் தர்ஷன் உள்ளிட்ட பிற கைதிகளும் வீட்டு உணவு கேட்டு நீதிமன்றத்திற்கு செல்லலாம். எனவே சிறையிலேயே தரமான உணவு வழங்குவதாகவும், அதனால் வீட்டு உணவு வழங்க பவித்ரா கவுடாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என அந்த மனுவில் சிறை நிர்வாகம் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..

ஹாவேரியில் உள்ள பவித்ரா கவுடாவின் வழக்கறிஞர் பாலன் கூறுகையில் பவித்ரா கவுடா தொலைக்காட்சி பார்க்கவும் நூலகத்தைப் பயன்படுத்தவும் அனுமதி உள்ளது. சிறைச்சாலை மெனுவில் வீட்டு உணவைச் சட்டம் அனுமதிக்கிறது . சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதை கேட்டு விண்ப்பித்தார் . நீதிபதி தனி விண்ணப்பத்தை தாக்கல் செய்யச் சொல்லியிருந்தார். வீட்டில் சமைத்த உணவைக் கேட்பது உங்கள் உரிமை. சிறைக்குள் சிறைச்சாலை மெனு உள்ளது. வீட்டில் சமைத்த உணவுக்கும் இதே போன்ற நிபந்தனைகள் உள்ளன . நோயாளிகள் சிறை உணவை சாப்பிட முடியாது" என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+