சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்.. 11 பேர் மயக்கம்! தட்சிண கன்னடாவில் பரபரப்பு
பெங்களூர்: தட்சிண கன்னட மாவட்டம் புட்டூரில், முதல்வர் சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி சுமார் 11 பெண்கள் மயக்கமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, புட்டூர் எம்எல்ஏ அசோக் ராயின் தலைமையில் 'அசோக ஜனமன-2025' எனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு ஆடைகள் விநியோகிக்கும் இந்த நிகழ்வில் முதல்வர் சித்தராமையா கலந்துகொண்டார். புட்டூர் தாலுகா மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

திட்டமிட்ட நேரத்தை விட தாமதமாக நிகழ்ச்சி தொடங்கியது. மதியம் 4 மணிக்குதான் உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சி தாமதமானதால் அதிக அளவில் மக்கள் மைதானத்தில் குவிந்தனர். இதனையடுத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "உணவு மற்றும் பிற பொருட்கள் விநியோகிக்கப்பட்ட இடத்திற்கு மக்கள் படையெடுத்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உணவு மற்றும் பரிசுகள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே இந்த சம்பவத்திற்குக் காரணம். நீண்ட நேரமாக மக்கள் ஒரே இடத்தில் நின்றுக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. எனவே நீர்ச்சத்து குறைபாடு காரணமாக பெண்கள் மயக்கமடைந்தனர். மூன்று பெண்களுக்கு நரம்பு வழி திரவங்கள் செலுத்தப்பட்டன. மேலும், ஏழு பெண்கள் மருத்துவ சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர்" என்று கூறியிருக்கிறார்.
மைதானத்தின் கொள்ளளவை விட கூட்டம் அதிகமாக இருந்ததால், பெண்கள் மற்றும் குழந்தைகள் நெரிசலில் சிக்கினர். மூச்சுத்திணறி மயக்கமடைந்தனர். முதல்வர் சித்தராமையா அங்கிருந்து கிளம்பிய உடனேயே இது நடந்தது. அங்கு கூடியிருந்த மக்கள், சரியான குடிநீர் வசதி இல்லை என்றும், சேறும் சகதியுமான மைதானத்தில் குழந்தைகளுடன் வந்த பல பெண்கள் சிரமப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
சமீபத்தில் கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சித்தராமையாவின் நிகழ்ச்சியில் 11 பேர் மயக்கமடைந்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications