குன்ஹாவிடம் "சிக்கிய" நித்தியானந்தா.. 50 வாய்தாவா.. நீதிபதி ஷாக்.. போலீஸுக்கு அதிரடி உத்தரவு!
பெங்களூரு: தலைமறைவான சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவை நேரில் சந்தித்து நீதிமன்றத்தில் ஆஜராக கோரும் சம்மனை வழங்க வேண்டும் என்று கர்நாடகா போலீசாருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி குன்ஹா உத்தரவிட்டுள்ளார்.
பாலியல் பலாத்கார வழக்கில் பெங்களூரு ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆஜராகவில்லை. இவ்வழக்கில் 50 முறை வாய்தா வாங்கியிருந்தார் நித்தியானந்தா.

இந்நிலையில் நித்தியானந்தா மீதான வழக்குகளை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும் அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரியும் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கை நீதிபதி குன்ஹா இன்று விசாரித்தார்
இந்த விசாரணையின் போது, நித்தியானந்தா நேரில் ஆஜராகாமல் 50 வாய்தாக்களுக்கு விலக்கு அளித்தது எப்படி என நீதிபதி குன்ஹா கேள்வி எழுப்பினார். மேலும் நித்தியானந்தாவை நேரில் சந்தித்து நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரும் சம்மனை அளிக்கவும் கர்நாடகா போலீசாருக்கு நீதிபதி குன்ஹா உத்தரவிட்டார்.
அப்போது, நித்தியானந்தா இந்தியாவிலேயே இல்லை என கர்நாடகா போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று அனுப்பி வைக்கப்பட்ட சம்மனை நித்தியானந்தாவிடம் நேரில் அளிக்க வேண்டும்; இது தொடர்பாக திங்கள்கிழமை பிற்பகலில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கர்நாடகா போலீசாருக்கு நீதிபதி குன்ஹா உத்தரவிட்டுள்ளார்.
நித்தியானந்தா போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் நித்தியானந்தாவின் இருப்பிடத்தை தெரிவிக்க கோரும் ப்ளூ கார்னர் நோட்டீஸ் ஏற்கனவே இண்டர்போல் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரீபியன் தீவுகளில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அங்கே கைலாசா என்கிற தனிநாட்டை நித்தியானந்தா உருவாக்கியுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டும் உள்ளது. இந்நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் சம்மனை அம்மாநில போலீசார் எப்படி நித்தியானந்தாவிடம் கொடுக்கப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்ஹா யார்?
நீதிபதி குன்ஹா யார் எப்படிப்பட்டவர் என்பதை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் மறந்திருக்க முடியாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான வழக்கில் அவர்களுக்கு அதிரடியாக சிறைத் தண்டனை வழங்கி அதிர வைத்தவர் குன்ஹா. இந்த தீர்ப்புதான் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியும் வைத்தது. இன்று வரை மற்ற மூவரும் சிறையில் வாடி வருகின்றனர் என்பதும் நினைவிருக்கலாம். இப்போது நித்தியானந்தா விவகாரம் குன்ஹாவிடம் வந்துள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications