இப்படியும் கார்களில் தீ பிடிக்குமா? பெங்களூரில் 278 கார்கள் தீ விபத்தில் சிக்கியதன் காரணம் வெளியானது
Recommended Video

பெங்களூர்: பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெற்ற, இடத்திற்கு அருகே 278 கார்கள் எரிந்து நாசமான சம்பவத்தின் பின்னணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு எலகங்கா பகுதியில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வந்தது. கண்காட்சியின் நான்காவது நாளான கடந்த சனிக்கிழமையன்று, பார்வையாளர்கள் கார்களை நிறுத்தி வைக்கும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 278 கார்கள் தீயில் கருகி முழுமையாக சேதமடைந்தன. 73 கார்களுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டது.

விடை கிடைத்தது
இத்தனை கார்களுக்கு ஒரே நேரத்தில் தீ எவ்வாறு பரவியது என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. இந்த கொடுமையான விபத்து தொடர்பாக இந்திய பாதுகாப்புத் துறையும் தனது விசாரணையை தொடங்கி உள்ளது. முன்னதாக நேற்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

சைலன்ஸர்
இது தொடர்பாக பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தீ விபத்திற்கு காரணம் என்ன என்பது பற்றி கூறப்பட்டுள்ளது. பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் சைலன்ஸரில் மிக அதிகமான அளவுக்கு சூடு இருந்ததுதும், அந்த சூடு தான் அந்த காரில் தீ பிடிக்க காரணமாக இருந்துள்ளதும், அப்போது சுமார் 30 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருந்ததால் தீ மளமளவென பிற கார்களுக்கும் பரவியுள்ளதாகவும், அதில் கூறப்பட்டுள்ளது.

சிகரெட் என்றனர்
கார்கள் நிறுத்தப் பட்ட பகுதி கோரைப் புற்கள் அதிகமாக உள்ள பகுதியாகும். எனவே நெருப்பு, காற்றின் உதவியோடும் மிக வேகமாக பரவி உள்ளதாக கூறப்படுகிறது. யாரோ சிகரெட்டை அணையாமல் தூக்கிப்போட்டு, அதன் மூலமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதலில் சந்தேகம் எழுந்த நிலையில் சைலன்ஸர் அதிக சூடானது.

அரிதான நிகழ்வு
சைலன்ஸர் சூடு காரணமாக காரில் தீப்பிடித்து அது பிற காார்களுக்கும் பரவியதாக தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அரிதினும் அரிதாக நிகழக்கூடியவை என்கிறார்கள் மோட்டார் துறை வல்லுனர்கள். இது உண்மையான காரணம் தானா என்று சந்தேகம் எழுப்புகின்றனர் எதிர்கட்சியினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications