எல்லோரும் பாஜகவுடன் கை கோர்க்கணும்.. முஸ்லீம்களுக்கு கர்நாடக காங். தலைவர் அழைப்பு!
பெங்களூர்: தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் அதிகரித்தால், நாடு முழுவதும் உள்ள முஸ்லீம்கள், பாஜகவுடன் சமரசமாகப் போக முன்வர வேண்டும் என்று முன்னாள் அமைச்சரான ரோஷன் பெய்க் கூறியிருப்பது கர்நாடகாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த முக்கிய காங்கிரஸ் தலைவர் ரோஷன் பெய்க். சமீப காலமாக கட்சித் தலைமையுடன் அதிருப்தியில் உள்ளார். கட்சியிலிருந்து விலகப் போவதாகவும் தகவல்கள் உள்ளன. இந்த நிலையில் முஸ்லீம்கள், பாஜகவுடன் கை கோர்க்க வேண்டும் என்று பெய்க் பேசியுள்ளார்.
இதுகுறித்து ரோஷன் பெய்க் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

நிலைமைக்கு ஏற்ப மாறுங்க
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நான் முஸ்லீம் சகோதரர்களைக் கேட்டுக் கொள்வது, நிலைமைக்கு ஏற்ப மாறி விடுங்கள். அதற்கு முன்வர வேண்டும்.

தேவைன்னா பாஜக
தேவைப்பட்டால் பாஜகவுடன் கை கோர்க்கவும் முஸ்லீம்கள் தயங்கக் கூடாது. காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஒரே ஒரு முஸ்லீமுக்குத்தான் சீட் கொடுத்தது. எனவே பாஜகவுடன் கை கோர்ப்பதில் தவறே இல்லை.

காங்கிரஸால் பலன் இல்லை
நாம் ஒரு கட்சிக்கு மட்டும் விசுவாசமாக இருக்க முடியாது. கர்நாடகத்தில் முஸ்லீம்களை எந்த கட்டத்தில் வைத்திருக்கிறது காங்கிரஸ் என்று பாருங்கள். ஒரு சீட்டுக்குத்தான் நாம் பயன்பட வேண்டுமா.

விலகுவேன்
தேவைப்பட்டால் நான் கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுப்பேன். கட்சியில் முஸ்லீம்கள் தொடர்ந்து அவமானத்தை சந்தித்து வருகின்றனர். நாங்கள் கெளரவமாக வாழ விரும்புகிறோம். எங்கு மரியாதை கிடைக்குமோ அங்கு வாழவே விரும்புகிறோம்.

எங்கு அன்பு கிடைக்குமோ அங்கு
எங்களிடம் யார் அன்பைக் காட்டுகிறார்களோ, பாசம் காட்டுகிறார்களோ அவர்களுடன் இணைந்திருக்க விரும்புகிறோம். கர்நாடகத்தில் தற்போது முஸ்லீம்களின் நிலைமை மோசமாக இருக்க கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவின் மோசமான பிரச்சாரம்தான் காரணம். சித்தராமையும் இன்னொரு காரணம் என்றார் ரோஷன் பெய்க்.
ஏற்கனவே மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை, பாஜக தன் பக்கம் இழுத்துக் கொண்டது. இப்போது ரோஷன் பெய்க்கும் கிளம்பப் போகிறார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications