பெங்களூருவில் பட்டபகலில் சொகுசு காரின் கண்ணாடியை உடைத்து பாய்ந்த நபர்.. நடந்ததை நீங்களே பாருங்க
பெங்களூரு: பெங்களூரு நகரின் சர்ஜாபூர் பகுதியில் பட்டப்பகலில் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த பிஎம்டபிள்யூ காரின் கண்ணாடியை உடைத்த கொள்ளையர்கள், அதில் இருந்த ரூ.13 லட்சம் பணத்தை திருடிச் சென்றுள்ளார்கள். கொள்ளையர்கள் எப்படி திருடிச்சென்றார்கள் என்பது குறித்து சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
பெங்களூருவில், கடந்த அக்டோபர் 20ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சர்ஜாபூர் பகுதியில் ஆனேக்கல் தாலுகாவைச் சேர்ந்த பாபு என்பவர் பிஎம்டபிள்யூ காரை நிறுத்திவிட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த திருடர்கள் இரண்டு பேர், நின்று கொண்டிருந்த பிஎம்டபிள்யூ காரின் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பின்னர் அங்கு வந்த காரின் உரிமையாளர் பணத்தை காணாது திடுக்கிட்டார். அவர் உடனடியாக சர்ஜாபூர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்தனர்.
பட்டப் பகலில், ஆள் நடமாட்டமுள்ள பகுதியில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் பாபுவின் பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 கார் நின்று கொண்டிருந்தது. அப்போது ஹெல்மெட்டுடன், முகக் கவசம் அணிந்தபடி அருகில் சென்ற கொள்ளையன் காரின் பின்புறம் தயாராக நின்று கொண்டிருந்தார். இன்னொரு கொள்ளையன் எதார்த்தமாக காரின் டிரைவர் சீட் கதவுக்கு அருகில் போய் நிற்பது போல் நின்றார்.
பின்னர் சுற்றி முற்றும் பார்த்துவிட்டு கார் அருகில் நின்ற கொள்ளையன், திடீரென கார் கதவு கண்ணாடியை உடைத்து, தலையை காரின் உள்ளே நுழைத்து பணம் வைக்கப்பட்டிருந்த கவரை எடுத்துக்கொண்டு இறங்கினான். பின்னர் இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொரு கொள்ளையனின் பின்னால் அமர்ந்து ஏறி மின்னல் வேகத்தில் சென்றுவிட்டான்'.
இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.இருசக்கர வாகனம் எங்கெல்லாம் சென்றது என்பதை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த பிஎம்டபிள்யூ காரின் கண்ணாடியை உடைத்து கொள்ளையர்கள் 13 லட்சம் திருடிய சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் கொள்ளையர்களுக்கு 13 லட்சம் பணம் இந்த காரில் இருப்பது எப்படி தெரிந்தது என்ற கேள்வியும் எழுகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications