மேலும் ஒரு வருஷம் சிறையா? சசிகலா 10 கோடி அபராதத்தை இன்னும் கட்டாததால் சிக்கல்
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் முடிகிறது. இந்நிலையில் நீதிமன்றம் விதித்த 10 கோடி அபராதத்தை கட்டவில்லை என்றால், சசிகலா மேலும் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டுமாம்.
ஜெயலலிதா, சசிகலா, இளரவசி, சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து. இதில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கு 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து,

இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதேநேரம் ஜெயலலிதா இறந்து போனதால் அவர் பெயரை மட்டும் விடுவித்தது. ஆனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரையும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்த தண்டனையின் படி 4 ஆண்டுகள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. 10 கோடி அபராதத்தையும் வசூலிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு பரப்பனா அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று பேரும் இந்த மாதத்துடன் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டனர். இன்னும் ஓராண்டு மட்டுமே சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டி உள்ளது.
இதற்கிடையில் நீதிமன்றம் விதித்த 10 கோடி அபராதத்தை சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் இதுவரை செலுத்தவில்லை என சிறை நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் சசிகலா அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று சொல்கிறார்கள்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications