பெங்களூர் விரைந்த டிடிவி தினகரன்.. சித்தியிடம் நலம் விசாரிப்பு.. சசிகலா நல்லா இருக்கிறாராம்!
பெங்களூர்: மூச்சு திணறல் காரணமாக பெங்களூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்து நலம் விசாரித்தார். தொண்டர்கள் யாரும் பெங்களூர் வரவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பெங்களூர் சிறைச்சாலையில் இருந்து மூச்சுத்திணறல் காரணமாக சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு சசிகலா அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும் அங்கு இன்று சிடி ஸ்கேன் எடுத்து பார்க்க மிஷின் வேலை செய்யாததன் காரணமாக, விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.

சசிகலாவை சந்தித்த உறவினர்கள்
முன்னதாக, பெங்களூர் விரைந்து வந்த டிடிவி தினகரன், தனது சித்தியான சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தகவலை பாருங்கள்: எங்களது குடும்பத்தில் ஒரு சில மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மருத்துவமனை உள்ளே சென்று எனது சித்தியை பார்த்து நலம் விசாரிக்க காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது.

அனுமதி தரவில்லை
நான் நெருங்கிய உறவினர் என்பதால் அனுமதி கேட்டு இருந்தேன். ஆனால் அந்த அனுமதி வழங்கப்படவில்லை. அவருக்கு, நல்லபடியாக சிகிச்சை வழங்கினால் மட்டும் போதுமானது. தற்போது விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக வெளியே வரும்போது அவரை சந்தித்து பேசினேன்.

நலமாக இருக்கிறார்
நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். உடலில் ஆக்சிஜன் அளவு சீராக இருக்கிறது. எனவே தொண்டர்கள் யாரும் கவலைப்படத் தேவை கிடையாது. பிசிஆர் பரிசோதனையில் கொரோனா இல்லை என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் சிடி ஸ்கேன் எடுத்து பார்ப்பதற்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சிடி ஸ்கேன்
இறைவனுடைய அருளால் சிடி ஸ்கேன் ரிப்போர்ட் நார்மல் என்று வந்தால் ஒரு சில நாட்கள் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பிறகு அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். நமது தொண்டர்கள் சசிகலா சென்னை திரும்பும்போது வழிநெடுகிலும் வரவேற்பு கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்று தெரியும். தற்போது ஆர்வத்தின் காரணமாக பெங்களூர் வருவதற்கு முயற்சி செய்கிறீர்கள். ஆனால் அப்படி வர வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக் கொண்டிருக்கிறது.

வரவேற்பு
நீங்கள் தமிழகம் வரும்போது வரவேற்பு கொடுங்கள். சமூக இடைவெளி விட்டு முக கவசம் அணிந்து நின்றபடி வரவேற்பு கொடுத்தால் போதுமானது. இந்த காலகட்டத்தில் பெங்களூர் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications